Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 செப்டம்பர், 2019

முயலும், பச்சோந்தியும்...!

Image result for முயலும், பச்சோந்தியும்...!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



முயலும், பச்சோந்தியும் வாழ்ந்த காட்டுப் பகுதி மழையின்றி வறண்டு போனது. அந்தக் காடு வளம் பெறும் என்று காத்திருந்த முயலுக்கும், பச்சோந்திக்கும் நம்பிக்கை போய்விட்டது. இரண்டும் உணவின்றித் தவித்தன. இனியும் இங்கே வாழ்க்கை நடத்த முடியாது என்று புரிந்துகொண்டன. அதனால், வேறு செழிப்பான பகுதிக்குப் சென்று வசிக்கலாம் என்று தீர்மானித்து, இரண்டும் புறப்பட்டன. வெகுதூரம் பயணித்த பிறகு வழியில் ஒரு குரங்கைச் சந்தித்தன.

முயலும், பச்சோந்தியும் குரங்கிடம் அண்ணா! நாங்கள் வசித்து வந்த பகுதி வறண்டு போய்விட்டது. செழிப்பான பகுதி ஏதேனும் அருகில் இருக்கிறதா? என்று கேட்டன. அதற்கு குரங்கு சற்றுத் தொலைவில் செழிப்பான காடு இருக்கிறது. நான் அங்கேதான் வசிக்கிறேன். எங்கள் சிங்க ராஜா நன்றாக ஆட்சி நடத்துகிறார். அங்கே போய் நீங்கள் வசிக்கலாம் என்றது.

முயலும், பச்சோந்தியும் குரங்கு சொன்ன காட்டிற்கு வந்து சேர்ந்தன. அப்போது சூரியன் மறைந்து இருட்டிவிட்டதால் அவை இரண்டும் ஒரு மரப்பொந்தில் தங்கிக் கொண்டன. அது இரண்டும் நாளை முதல் இந்தக் காட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டு நிரந்தரமாக வாழலாம் என்று தீர்மானித்தது.

மறுநாள் முயலும் பச்சோந்தியும் ஆளுக்கொரு திசையில் வேலை தேடிச் சென்றன. மாலையில் இரண்டும் தங்கியிருந்த மரப்பொந்திற்கு வந்தன. பச்சோந்தியிடம், எனக்கு வேலை கிடைத்துவிட்டது. மண்ணைத் தோண்டி கிழங்கு, கடலை எடுக்கும் வேலை என்று முயல் கூறியது.

அதற்கு பச்சோந்தி, எனக்கும் அரசவையில் அதிகாரியாக வேலை கிடைத்திருக்கிறது என்று பொய் கூறியது. மறுநாளிலிருந்து முயல் வேலைக்குச் சென்று வந்தது. பச்சோந்தியும் வெளியே சென்றது. ஆனால், அது எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. இப்படியாக ஒரு மாதம் கழிந்தது.

ஒருநாள் கடலைக் காட்டில் முயல் வேலை செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த குரங்கு, அன்று உன்னுடன் வந்த பச்சோந்தியை மரத்தில் கட்டி வைத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்று தெரியவில்லை. சிங்க ராஜா தண்டனை கொடுக்கக் காத்திருக்கிறார் என்று கூறியது.

அதைக் கேட்ட முயலுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் என்ன தவறு செய்தான்? என்று சொல்லிக்கொண்டே, பச்சோந்தியைக் கட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி முயல் ஓடியது. பச்சோந்தி தலை குனிந்தபடி நின்றிருந்தது. முயல் நேராக சிங்க ராஜாவிடம் சென்று, அரசே! இவன் என் நண்பன். இவன் என்ன தவறு செய்தான்? என்று பணிவாகக் கேட்டது. இவன் கடந்த ஒரு மாதமாக நம் காட்டில் பலரும் உழைத்துச் சேகரித்து வைத்திருக்கும் உணவுகளைத் திருடி தின்று வந்திருக்கிறான். யாராலும் இவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காரணம் இவன் இடத்திற்கு தகுந்தாற்போல தன் நிறத்தை மாற்றிவிடுகிறான்.

இன்று காய்ந்த இலைச் சருகுகளோடு சருகாக மறைந்து உணவைத் திருடி தின்று கொண்டிருந்தான். ஆனால் திடீரென்று அடித்த காற்றில் சருகுகள் பறந்துவிட்டன. அப்போதுதான் இவன் மாட்டிக்கொண்டான். இப்போது இவன் செய்த தவறுக்காக இவனுக்கு கசையடி கொடுக்கப் போகிறேன் என்றது சிங்கம்.

நண்பா, என்னை மன்னித்துவிடு என்று பச்சோந்தி முயலிடம் கேட்டது. நான் ஒரு மாதமாக வேலைக்குப் போகவில்லை. என் உடலின் நிறத்தை மாற்றும் திறமையை வைத்து நான் உணவைத் திருடித் தின்றேன். நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று பச்சோந்தி அழுதது.

பச்சோந்தியின் மீது இரக்கம் கொண்ட முயல் சிங்கத்திடம், அரசே! இவனை மன்னித்துவிடுங்கள். இனி இவன் திருட மாட்டான். ஏதேனும் இவனுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டது. நீ இங்கு வந்த ஒரு மாதத்திலேயே நல்ல உழைப்பாளி என்று தெரிந்துகொண்டேன்.

உனக்காகப் பச்சோந்தியை மன்னிக்கிறேன். இவன் நம் உளவுத்துறையில் பணிபுரியட்டும். எதிரிகளின் கண்ணில் படாமல் மறைந்திருந்து உளவு பார்த்துவரட்டும். ஒருவன் தனக்கு இருக்கும் திறமையை நல்வழியில் பயன்படுத்தினால் எப்போதும் பேரும் புகழும் கிடைக்கும். தீய வழியில் பயன்படுத்தினால் தீமைதான் நடக்கும் என்று கூறிவிட்டு சிங்கம் சென்றது. பிறகு பச்சோந்தியும் திருடுவதை விட்டுவிட்டு, உழைத்து வாழ ஆரம்பித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக