Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

பைக், ஸ்கூட்டர் விற்காததற்கு இதுதான் முக்கிய காரணம்: ஹோண்டா


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

பொருளாதார மந்தநிலையும் ஜிஎஸ்டி குறைக்கப்படாமல் இருப்பதும் விற்பனையைப் பாதித்துள்ளது. பிஎஸ்6 வாகனங்களின் விலை அதிகரிக்கப்போகும் சூழலைச் சமாளிப்பது சவாலாக இருக்கும்


பைக், ஸ்கூட்டர் விற்காததற்கு இதுதான் முக்கிய காரணம்: ஹோண்டா
ஹைலைட்ஸ்
  • பொருளாதார மந்தநிலையே டூ வீலர் விற்பனை குறைந்திருப்பதற்குக் காரணம்.
  • ஹோண்டா நிறுவனத் தலைவர் கடோ விமர்சனம்.
இரு சக்கர வாகனங்கள் விற்பனை வீழ்ச்சி கண்டிருப்பதற்கு பொருளாதார மந்தநிலைதான் காரணம் என்று ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனத்தின் (HMSI) தலைமை செயல் அதிகாரி மினொரு கடோ, எதிர்காலத்தில் பிஎஸ் 6 வாகனங்களுக்கு அதிக விலை இருக்கும். அந்தச் சூழலைச் சமாளிப்பது இப்போதய நிலையைவிட சவாலாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் இப்போது நிலவும் பொருளாதார மந்தநிலையே இரு சக்கர வாகனங்கள் விற்பனை குறைந்திருப்பதற்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார். ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுக விழாவில் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார்.

ஆக்டிவா 125 (Activa 125) ஸ்கூட்டர் புதிய மாசுக்கட்டுப்பாட்டு விதியின்படி தயாரிக்கப்பட்ட பி.எஸ். 6 ரக ஸ்கூட்டர் ஆகும். இதற்கு 67,490 ரூபாய் முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது பிஎஸ் 4 வாகனத்தின் விலையை விட 10-14 சதவீதம் அதிமாகும்.
வாகன காப்பீட்டு வசதியைப் புரிந்துகொண்டு அதிக அளவு மக்கள் இரு சக்கர வாகனங்கள் வாங்க முன்வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், பொருளாதார மந்தநிலையும் ஜிஎஸ்டி குறைக்கப்படாமல் இருப்பதும் விற்பனையைப் பாதித்துள்ளது என கடோ தெரிவித்தார்.

"இப்போதைக்கு பிஎஸ் 6 வாகனங்களின் அதிகரிக்கவில்லை. காப்பீடு விஷயத்தில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், பொருளாதார அடிப்படைகளில் உள்ள குறைபாடுகள் மந்தநிலைக்குக் காரணமாக உள்ளன. இதுதான் விற்பனை வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று." என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, எதிர்காலத்தில் பிஎஸ்6 வாகனங்களின் விலை அதிகரிக்கப்போகும் சூழலைச் சமாளிப்பது சவாலாக இருக்கும் என் நினைக்கிறோம் என்றார்.

மந்தநிலையை கருத்தில்கொண்டு உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு பதில் கூறிய கடோ, "குஜராத்தில் நான்காவது உற்பத்திச் சாலை அமைக்கும் பணி திட்டமிட்டபடி நடக்கிறது. ஆனால், அங்கு உற்பத்தியைத் தொடங்குவது பற்றி அப்போது இருக்கும் நிலையைப் பொருத்து முடிவு செய்வோம்" என்றார்.

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் பி.எஸ். 6 வாகனங்கள் மீது 2,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 1, 2020 அன்று பிஎஸ் 6 வாகன விதிகள் அறிமுகமாகும்போது ஹோண்டாவின் 16 விதமான பிஎஸ் 6 ரக இரு சக்கர வாகனங்களும் சந்தையில் இருக்கும் என கடோ உறுதி அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!