Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 செப்டம்பர், 2019

பரவசமூட்டும்... பைக்காரா நீர்வீழ்ச்சி...!!

 Image result for பரவசமூட்டும்... பைக்காரா நீர்வீழ்ச்சி...!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் முக்கியமான ஒன்று நீலகிரியில் இருக்கும் அழகிய நீர்வீழ்ச்சியான பைக்காரா நீர்வீழ்ச்சி தான்.

 ஊட்டியிலிருந்து ஏறத்தாழ 23கி.மீ தொலைவிலும், நீலகிரியிலிருந்து ஏறத்தாழ 27 கி.மீ தொலைவிலும், கோத்தகிரியிலிருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய ஏரிதான் பைக்காரா நீர்வீழ்ச்சி.

சிறப்புகள் :

 உயரமான மலைகள், அடர்ந்த காடுகள், பரந்த புல்வெளிகள், அழகான பள்ளத்தாக்குகள் காரணமாக மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு அருகில் அமைந்துள்ள அழகிய இடம்தான் பைக்காரா நீர்வீழ்ச்சி.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் பைக்காரா அருவியும் ஒன்று.

 உதகமண்டலம் அருகேயுள்ள பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது.

 இது பல சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக திகழ்கிறது.

 பைக்காரா அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது, இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும்போது அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது.

 இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த பைக்காரா அணையிலிருந்து மின் உற்பத்திக்காக நீர் திறந்து விடும்போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்.
குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

 இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியை சுற்றிலும் பல வகையான மரங்கள் மற்றும் குளிர்ச்சி நிறைந்த இடமாக இது திகழ்கிறது.

கோடைகாலங்களில் வெயிலில் இருந்து விடுபடுவதற்கு இது ஒரு சிறந்த இடமாக சுற்றுலாப்பயணிகளால் கருதப்படுகிறது.

எப்படி செல்வது?

நீலகிரிக்கு ரயில் மூலமாகவோ அல்லது பேருந்து மூலமாகவோ செல்லலாம். நீலகிரியிலிருந்து கார் அல்லது வாடகை வாகனங்களின் மூலமாக சென்றால் வழிநெடுகிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் மலையின் அழகை ரசித்துக் கொண்டே செல்ல முடியும்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

நீலகிரி மற்றும் ஊட்டியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக