Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 அக்டோபர், 2019

வருகிறதா புதிய 1000 ரூபாய் நோட்டு!!

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டு மறைந்து, வரும் 2020, ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து புதிய 1000 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வர இருப்பதாக சமூக ஊடகங்களில் தீயாக செய்தி பரவி வருகிறது.


 வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குப் பின்னர் 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருக்காது. இன்னும் பத்து நாட்களில் 50,000 ரூபாய் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும். எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்து இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

வரும் அக்டோபர் 10ஆம் தேதிக்குப் பின்னர் 2000 ரூபாய் நோட்டை மாற்ற முடியாது என்றும் செய்தி வெளியாகி வருகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை என்று தி குவின்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது வெறும் வதந்திதான். அதில் சிறிதும் உணமையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை விசாரித்து அறிந்து கொண்டதாக அந்த செய்தியில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எந்த தகவலையும் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளமும் வெளியிடவில்லை. உறுதிபடுத்தப்படாத, அதிகாரபூர்வமற்ற செய்தியாக சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆர்பிஐயின் தகவல் தொடர்பு துறையின் சிஜிஎம் யோகேஷ் தயாளை தி குவின்ட் இணையதளம் சந்தித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், ''நாங்கள் எந்தவித நோட்டீசும் வெளியிடவில்லை. எங்களது அனைத்து அறிவிப்புகளும் ஆர்பிஐயின் அதிகாரபூர்வ இணையத்தில் வெளியாகும். ஆதலால், புரளியை நம்ப வேண்டாம்'' என்று யோகேஷ் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற வதந்திகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி ரிசர்வ் வங்கி தெரிவித்து இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதாவது ஒன்பது பொதுத்துறை வங்கிகளை ரிசர்வ் வங்கி மூட இருப்பதாக செய்தி வெளியானது. பின்னர் அது போலி செய்தி என்று நிரூபணமானது.
 

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதியும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதில், புதிய 2 ரூபாய், 3 ரூபாய், 500 ரூபாய், 100 ரூபாய், 125 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் காசு வெளியிட இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அதுவும் போலிச் செய்தி என்று இறுதியில் நிரூபணமானது.

 
தற்போதும் புதிய செய்தி வெளியாகி தீயாக பரவி வருகிறது. 2000 ரூபாயை இந்திய ரிசர்வ் வங்கி வாபஸ் வாங்க இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி எந்தளவிற்கு உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!