Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 அக்டோபர், 2019

காதலன் மரணம்.. மாணவியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்

 Image result for காதலன் மரணம்.. மாணவியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கேரளா மாநிலம் இடுக்கியை அடுத்த வாத்திகுடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான ரம்யா பெயர் மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி மாணவியான இவர் உடன் படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
அந்த இளைஞருடன் நெருக்கமாக பழகியதால் அவர் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தனக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் அதனை புத்தக பையில் மறைத்து வைத்துள்ளதாகவும் அப்பெண் உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்த போலீசார், புத்தகப் பையில் குழந்தையின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியிடம் நடந்திய விசாரணையில் கர்ப்பம் தரித்து 6 மாசமே ஆனதாகவும் இதனை பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டின் குளியலறையில் குழந்தை பெற்றதாகவும் குறைபிரசவம் என்பதால் குழந்தை இறந்து பிறந்ததாகவும் அப்பெண் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்தது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வதற்காக குழந்தையின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் சுற்றி புத்தகப் பையில் மறைத்து வைத்து வீட்டைவிட்டு மாணவி வெளியேறியுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்கொண்டு அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் சில நாட்களிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மாணவியை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கல்லூரி மாணவி இறந்த குழந்தையின் சடலத்தை புத்தகப் பையில் வைத்து சுற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக