Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 15 அக்டோபர், 2019

உண்மையான மகிழ்ச்சி..!

 Image result for உண்மையான மகிழ்ச்சி..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஒரு சிறு குருவிக்கு ஒரு நாள் அழகிய கனவு ஒன்று வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள் என அந்த உலகம் அற்புதமாக இருந்தது.

எப்படியாவது அந்த உலகத்திற்கு செல்ல வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால், போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை. அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.

காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்திற்கு வழி தெரியாதா என்ன? என்று அவரிடம் குருவி வழி கேட்டது. அதற்கு ஜோதிடர் எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும் என்றார்.

ஒரே ஒரு சிறகுதானே என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்திற்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நின்றது. அப்போது அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி கூறு என்றது.

பாம்பும், இங்கிருந்து அந்தப் பகுதிக்கு செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும், சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்துவிடு என்றது. இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.

பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை. இப்படியே அந்தக் குருவி, அங்கிருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள்.

குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக கொடுத்தப்படி சென்றது. முடிவாக, கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.

குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனால், அப்போது குருவியால் கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லை. பிறகுதான் குருவிக்கு மெல்ல மெல்ல புரிந்தது. பறப்பதற்கான சிறகுகளில் பாதி தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம் இருந்தும், அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன் என்று வருந்தியது. அந்த சோகமும், ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தப்படியே பரிதவித்துக் கொண்டிருந்தது.

இன்று நம்மில் பலரது நிலைமையை குறிப்பிடும் கதைதான் இது. நவீன வசதிகளே சந்தோஷம் என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.

கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது உடலும், மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால், ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக