>>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 1 அக்டோபர், 2019

    கடவுள் கற்றுக் கொடுத்த பாடம்.!

    Image result for கடவுள் கற்றுக் கொடுத்த பாடம்.!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    ஒரு ஊரில் ரமேஷ் என்பவர் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகமாக இருந்தது. அதனால் அவர் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவார். பிறகு காட்டிற்கு விறகு வெட்ட சென்று விடுவார். வெட்டிய விறகை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருவார்.

    ஓரளவிற்கு அதில் வரும் வருமானத்தை வைத்து நிம்மதியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தார். ஒரு நாள் இதுபோல அவர் காட்டிற்கு செல்லும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை. ஏதோ விபத்தில் இழந்துவிட்டது போல இருந்தது. அது தனியாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அவருக்கு மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை, அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தார்.

    இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அந்த வழியில் ஒரு புலி வந்தது. அதை பார்த்த உடனே அவர் ஓடிச் சென்று ஒரு மரத்திற்கு பின்புறமாக ஒளிந்து கொண்டார். அங்கு ஒளிந்து கொண்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பித்தார்.

    அந்த புலி, ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துக்கிட்டு வந்து, அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டது. புலி சென்ற பின்பு கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கொண்டே வந்து மிச்சம் இருந்ததை சாப்பிட்டது. இதையெல்லாம் மரத்திற்கு பின்னாடி நின்று ரமேஷ் பார்த்துக் கொண்டிருந்தார்.

    பிறகு அவர் யோசித்து பார்க்கிறார். இரண்டு காலும் இல்லாத ஒரு நரிக்கே கடவுள் சாப்பாடு அளிக்கிறார். அப்படி இருக்கும் பொழுது தினமும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடும் எனக்கு சாப்பாடு போடாம விடுவாரா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் உள்ளது. நாம எதுக்கு தேவையில்லாம வெயிலில் கஷ்டப்படனும்? எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டனும்...? என்று யோசிக்க ஆரம்பித்தார்.

    அதற்கு பிறகு அவர் காட்டிற்கு சென்று விறகு வெட்டுவதை நிறுத்திவிட்டார். கோடாரியை தூக்கி எறிந்துவிட்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். ஆனால், கோவிலுக்கு மட்டும் சென்று வருவார். கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் என்று நம்பி கண்ணை மூடிக்கொண்டு கோவில் மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் சாய்ந்து கொண்டு இருந்தார்.

    இப்படியே இரண்டு நாட்கள் ஆனது. ஆனால், சாப்பாடு வந்த பாடில்லை! அவர் பசியால் வாடி போனார். உடம்பும் இளைத்து போனது. எலும்பும் தோலுமாக ஆனார். ஒரு நாள் இரவு நேரம் கோவிலில் யாருமே இல்லை. அவர் மெதுவாக கண்ணை திறந்து கடவுளை பார்த்தார்.

    ஆண்டவா... என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா..? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டுல அந்த நரிக்கு மட்டும் புலி மூலமாக சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே நானும் இங்கே வந்தேன்... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா? என்று கேட்டான்.

    பிறகு கடவுள் மெதுவாக கண்ணை திறந்து முட்டாளே! நீ பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை! புலியிடம் இருந்து என்று கூறினார். 

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக