Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

புறம் பேசாதீர்கள்..!


 Image result for புறம் பேசாதீர்கள்..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




மகரிஷி ஒருவர் காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அவர் தவத்தின் போது கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்னவென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். மகரிஷி கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். அதனை மகரிஷி உண்பார். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினார்கள்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தார். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரைப் போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தார். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். அதைப் பார்த்ததும் மன்னன் சிரித்தப்படியே அங்கிருந்து சென்றுவிட்டார்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அந்த முனிவர், மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உன்னையே உண்ண வைப்பார்கள். அதற்கு நீ தயாராக இரு! என்று கூறி விட்டு சென்றுவிட்டார்.

அதைக் கேட்டதும் மன்னன் அஞ்சி நடுங்கினார். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருத்தப்பட்டார். அதனால், தான, தர்மங்கள் செய்து தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தார். அதற்காக, அரண்மனையின் நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினார். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்திற்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதால் ஏற்படும் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பினார். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

ஆனால், அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறு மாதிரியாக கதை கட்டி விட்டனர். மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறார். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறார் என்று தவறாக கூறினர். ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்? எனக் கேட்டான். அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு என்று அவள் கூறினாள்.

அதற்கு அவளது கணவன், தானம் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா? என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாய் மேல் கை வைத்து, பின் மெதுவாக தன் கணவனிடம் சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தார். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவர் உண்பதற்காக தயாராக உள்ளது. அந்த விஷயம் மன்னனுக்குத் தெரிந்ததால், அந்த பாவ மலையை கரைக்க வேண்டும் என்பதற்காக, கன்னியருக்கு தான, தர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறார். ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவருக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர்.

கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும், அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள் என்று கூறினாள்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக்கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்திற்கும் புறம் பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக