Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 நவம்பர், 2019

அய்யனார் அருவி !!

Image result for அய்யனார் அருவி !!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




விருதுநகரில் இருந்து ஏறத்தாழ 69கி.மீ தொலைவிலும், இராஜபாளையத்தில் இருந்து ஏறத்தாழ 10கி.மீ தொலைவிலும், மதுரையில் இருந்து ஏறத்தாழ 104கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய மூலிகை கலந்த அருவிதான் அய்யனார் அருவி.

இந்த அருவி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது. இராஜபாளையம் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

 இந்த அருவி இராஜபாளையம் பகுதியின் முதன்மை சுற்றுலா ஈர்ப்பு பகுதியாக உள்ளது. திருவில்லிபுத்தூர், சிவகாசி மக்களின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.

இவ்வனப்பகுதி மலை ஏற்றத்தை விரும்புபவர்களுக்கு நல்ல இடமாக உள்ளது. அருவிக்கு போகும் வழியில் உள்ள அணை நகரத்திற்கு தேவையான நீரை வழங்குகிறது.

காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோவிலை ஒட்டி அருவி அமைந்துள்ளது.

இந்த அருவியைச் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியானது காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களுக்கு ஆர்வமூட்டும் இடமாக உள்ளது.

இது இங்கு வாழும் காட்டு விலங்குகளான குரங்குகள், யானைகள், மான்கள், காட்டெருமைகள் ஆகியவற்றிற்கும் நீராதாரமாக விளங்குகிறது.

இந்த அருவிக்கு அய்யனார் அருவி என்ற பெயர் வந்ததற்கு காரணம் இங்குள்ள சிறிய காட்டு அய்யனார் கோவிலாகும்.

வனத்தின் மூலிகை காற்றை சுவாசித்து அய்யனார் அருவியில் குளித்து வந்தால் தீராத நோய்களும் அற்றுப்போகும் என்பது நம்பிக்கை.

கரந்தமலையில் இருந்து நீர் ஊற்று உருவாகி, அருவியாக கொட்டுகிறது. இந்த நீர் மூலிகை செடிகளின் மீது பட்டு வருவதால், இதில் குளித்தால் புத்துணர்வும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் விழும் மூலிகை அருவியில் குளிப்பதற்காக செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதிர்ஷ்டசாலிகளே...

இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையை ரசித்தவாறே அருவியில் குளிப்பது அலாதியானது.

எப்படி செல்வது?

விருதுநகருக்கு அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

விருதுநகரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக