Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 டிசம்பர், 2019

300 கிலோ சின்ன வெங்காயத்தை பறிகொடுத்த தமிழக விவசாயி! போலீஸ் தீவிர விசாரணை!


 300 கிலோ சின்ன வெங்காயத்தை பறிகொடுத்த தமிழக விவசாயி! போலீஸ் தீவிர விசாரணை!
ற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது.
அந்த அளவிற்கு வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் வெங்காயம் விளைவிக்கும் பரப்பளவு குறைவு என்பதாலும், மேலும் இங்கு வேர் அழுகல் நோயினால் அந்த சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்படுவதாலும் தமிழகத்தில் கடுமையான விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் கூத்தனூரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் என்பவர் தனது தோட்டத்தில் சின்ன வெங்காயத்தை விதைப்பதற்காக சுமார் 300 கிலோ அளவிற்கு வாங்கி வைத்துள்ளார். அதனை மழை காரணமாக தார்பாய் போட்டு மூடி தனது தோட்டத்தில் வைத்துள்ளார். மறுநாள் விதைப்பதற்காக வந்த போது தான் வெங்காயம் திருடப்பட்டுள்ளது தெரிந்தது.
பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்து விட்டு , பின்னர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்  300 கிலோ வெங்காயத்தை திருடியது யார் ? என விசாரணை நடத்தி வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக