Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி!


கேரள, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனத்திற்காக அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சென்ற வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் படி சென்றவருடம் கேரளா போலீசின் பலத்த பாதுகாப்பு மூலம் சில பெண்கள் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்தனர்.
ஆனால், இந்தாண்டு கேரளா அரசு, ஐயப்பன் கோவிலுக்கு எப்போதும் கொடுக்கும் பாதுகாப்புதான் கொடுப்போம். பெண்களுக்கு தனி பாதுகாப்பு கொடுக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, பாத்திமா, பிந்து என்கிற இரு பெண்கள், சபரிமலைக்கு செல்லும்அணைத்துவயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபரிமலை செல்லும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது என கூறி இந்த வழக்கை நிலுவையில் வைத்துள்ளது.
சபரிமலை விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்கள் விரைவில் 7 பேர் கொண்ட பெரிய நீதிபதி அமர்வு மூலம் விசாரிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!