Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

LOCKDOWN-பின் எழும் சவால்களை சமாளிக்க புதிய திட்டங்கள் வெளியாக வாய்ப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கும் மற்றொரு பூஸ்டர் ஷாட் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது, ஆனால் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 15-ஆம் தேதி முழுஅடைப்பு நீக்கப்பட்ட பின்னர் வரக்கூடிய பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு அடைப்புக்கு பின்னர் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தொகுப்பு பற்றி விவாதங்கள் நடந்துள்ளன, ஆனால் இதுவரை எதுவும் இறுதி செய்யப்படவில்லை, இது நுகர்வோருக்கு புத்துயிர் அளிப்பதற்கான யோசனையாக அமையும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டால், கொரோனா வைரஸின் விரைவான பரவலால் எழும் சவால்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் மூன்றாவது பெரிய முயற்சியாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் 24 அன்று, பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய முழு அடைப்பினை அறிவிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோர் மற்றும் வணிகங்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1.7 லட்சம் கோடி நிவாரணப் பொதியை சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது முழு அடைப்புக்கு பிந்தைய நிலைமைக்கு ஏற்ப சில நலன்புரி மற்றும் பிற அரசாங்க திட்டங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர்கள் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக