Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

மணமேடையில் மனைவி, கணவன் ஷாக்..! கன்னியாகுமரியில் பரபரப்பு...



கன்னியாகுமரி அருகே திருமணமான பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் தடுத்து நிறுத்திய கணவர்


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டுவென்னி பகுதியைச் சேர்நதவர் 22 வயதான ஷாமிலி. இவர் பெங்களூரில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது பெங்களூரில் என்ஜினீயராக பணிபுரிந்த தருமபுரியை சேர்ந்த 25 வயதான ராஜூ என்ற வாலிபருடன் காதல் உருவனாது.

இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு ரகசிய திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தனர். பின்னர் கொரோனா ஊரடங்குக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஷாமிலி கொரோனா ஊரடங்கால் மீண்டும் பெங்களூருவுக்கு செல்ல இடைஞ்சல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தனக்கு திருமணம் நடந்ததை பெற்றோருக்கு தெரிவிக்காததால், ஊரில் இருந்த அவருக்கு திருமண வரன் பார்க்க துவங்கிய பெற்றோர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த வாலிபருக்கு மணமுடிக்க ஏற்பாடு நடந்தது.


பெற்றோரின் வலியுறுத்தலால் வேறு வழியின்றி ஷாமிலியும் சம்மதித்து விட்டார். இந்நிலையில் இரு வீட்டாரும் தடபுடலாக திருமண ஏற்பாடுகளை கவனித்தனர். திருமணத்தை நேற்றும் வரவேற்பு நிகழ்ச்சி அதற்கு முந்தைய நாளும் நடைபெறுவதாக பத்திரிக்கை அடித்து இரு வீட்டாரும் உறவினர்களுக்கு கொடுத்தனர்.

அதன்படி, திருமண வரவேற்பு நேற்று முன்தினம் மார்த்தாண்டத்தில் நடந்தது. நேற்று நடைபெற்ற திருமணத்தில் மணமகளும் மணமகனும் புத்தாடை அணிந்து உற்சாகத்தில் திழைத்தனர். அப்போது அங்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் மணமகளுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாகவும் அவருடைய கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.


இதனை கேட்ட மணமகன் அதிர்ச்சியடைந்தார். இதனால் கலகலப்பாக இருந்த திருமண நிகழ்ச்சி களையிழந்த நிலைக்கு சென்றது. தொடர்ந்து மணமகளை மார்த்தாண்டம் காவல்நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது ரகசிய திருமணம் செய்த விவகாரத்தை ஷாமிலி ஒப்பு கொண்டார். பின்னர் போலீசார் என்ஜினீயர் ராஜூவுடன் திருமண பெண்ணை அனுப்பி வைத்தனர். முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த செவிலியரின் இந்த செயல் அப்பகுதியில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Description: *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக