Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

முகம் இன்னும் பிரைட்டா மாறணும்னா இந்த பொடியெல்லாம் கலந்து யூஸ் பண்ணுங்க!

preparation of skin whitening powder: முகம் இன்னும் பிரைட்டா மாறணும்னா இந்த  பொடியெல்லாம் கலந்து யூஸ் பண்ணுங்க! - best kitchen ingredients to get  whitening and clear face | Samayam Tamil 

 

கருப்பு நிறம், மாநிறம், வெள்ளை நிறம் என்று எந்த நிறத்தில் இருந்தாலும் இருக்கும் நிறம் பிரைட்டாக மாற வேண்டும்.

 

முகம் எந்த நிறத்தில் இருந்தாலும் இருக்கும் நிறம் இன்னும் பிரைட்டாக இருந்தாலே போதும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் இந்த பொடியை கலந்து பயன்படுத்தினால் போதும்.

பெரும்பாலும் எல்லோரும் க்ரீம் பயன்படுத்துவதுண்டு. இவை தற்காலிகமாக பளிச் நிறத்தை கொடுத்தாலும் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு நாம் செய்யும் இந்த பராமரிப்பு சருமத்துக்கு பக்கவிளைவில்லாமல் பலன் அளிக்கும். அப்படி என்னென்ன பொருள்களையெல்லாம் சேர்க்கலாம். எப்படி நிறத்தை மேன்மைப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

 

முதல் கலவை
அரிசி - 200 கிராம்,
கோதுமை -200 கிராம்
கஸ்தூரி மஞ்சள் -200 கிராம்,
பாசிபயறு - 200 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்

அனைத்தையும் வாங்கி சுத்தம் செய்து தனித்தனியாக உலரவைத்து மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். தினமும் அல்லது அதிகம் பயன்படுத்தும் போது இப்படி மொத்தமாக அரைத்துகொள்ளலாம். அவ்வபோது தேவையெனில் மாவாக சிறிதளவு எடுத்துகொள்ளலாம்.இவை ஆறுமாதங்கள் முதல் ஒருவருடம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருள்கள்

 

இரண்டாவது கலவை
முதல் கலவையை மொத்தமாக அரைத்து வைத்துகொள்ளலாம். தேவையான போது தேவையான அளவு எடுத்து இந்த இரண்டாவது கலவையுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
சோற்றுக்கற்றாழை - ஒரு மடல்
ரோஜா இதழ் பொடி - அரை டீஸ்பூன்
சந்தனத்தூள் - அரை டீஸ்பூன்,
காய்ச்சாத பசும் பால் - 1 டீஸ்பூன்,
இந்த இரண்டை ஒவ்வொரு முறை முகத்துக்கு பயன்படுத்தும் போது சேர்க்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

 

முதல் கலவையை எடுத்து மொத்தமாக அரைத்து வைத்துகொண்டால் தேவையான போது இரண்டு டீஸ்பூன் எடுத்து பயன்படுத்தினால் போதுமானது. சோற்றுக்கற்றாழை மடலை நீக்கி உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை எடுத்துகொள்ளவும். அதை கையால் அல்லது மிக்ஸியால் அடித்து அதில் காய்ச்சாத பால், ரோஜா இதழ் பொடி, சந்தனப்பொடி மற்றும் முதல் கலவை மாவு பொடி சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.


இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் கழுத்துப்பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு நாளில் ஒரு வாரத்தில் ஒரு மாதத்தில் பயன்படுத்திவிட்டு நிறம் மாறவில்லையே என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து பயன்படுத்தினால் தான் பலன் தெரியும்.

தரும் நன்மைகள்

 

இதில் கலந்திருக்கும் ஒவ்வொரு பொடியும் ஒவ்வொரு விதமான நன்மைகளை செய்கிறது.அரிசி மாவு முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி முகத்தில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற உதவுகிறது. சந்தனம் முகத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.


சந்தன மேனி போல் என்றுசொல்லும் அளவுக்கு சருமத்தை மெருகேற்ற உதவுகிறது. முகத்தில் வடுக்கள், காயங்களால் உண்டான சரும நிற மாற்றம், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவற்றை போக்க உதவுகிறது.

கோதுமை மாவு இயற்கை ப்ளீச் போன்று சருமத்துவாரங்கள் வரை சென்று சருமத்தை பளிச் என்று ஆக்குகிறது. பாசிப்பருப்பும் கடலை மாவும் முகத்தில் சருமம் தளர்வுறாமல் நெகிழ செய்யாமல் இறுக்கமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சருமம் இளமையாக இருக்க உதவுகிறது.


கஸ்தூரி மஞ்சள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் வடுக்களை போக்கி சருமத்தில் இருக்கும் கிருஇம் நாசினிகளை வெளியேற்ற உதவுகிறது. முகத்தில் தேவையற்ற முடிகள் இருந்தாலும் அதையும் வெளியேற்ற மஞ்சள் உதவுகிறது.


கற்றாழை சருமத்துக்கு மினுமினுப்பை தரக்கூடிய பொருள் முகத்தில் வறட்சி உண்டாக்காமல் ஈரப்ப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. ரோஜா இதழ் பொடி கூடுதலாக மினுமினுப்பையும் தருகிறது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக