Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

தாயின் உதவியுடன் சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்..! மதுரை அதிர்ச்சி

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். அவரது மனைவி பகவதி. இந்த தம்பதிக்கு 17 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், சிறுவனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். அதனால் பலமுறை சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்ததும் வந்துள்ளான்.

அந்த விஷயம் சிறுவனின் வீட்டுக்கு தெரிந்தும்கூட பகவதி தனது மகனை கண்டிக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று சிறுமி தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக தனியாக சென்றுள்ளார். அப்போது டூ வீலரில் வந்த சிறுவன் சிறுமியை பலவந்தப்படுத்தி தனது வீட்டுக்கு ஏற்றி கொண்டு சென்றுள்ளார்.

அங்கு ஒரு அறையில் அவரை பூட்டி வைத்துள்ளனர். இதற்கிடையில், சிறுவனும் அவரது தாயும் சேர்ந்து தனது மகனை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி மிரட்டியுள்ளனர். மேலும், அவரை வீட்டிலேயே இரண்டு நாட்கள் அடைத்து வைத்திருந்த நீரையில் பகவதியின் மகன் பலாத்காரம் செய்துள்ளான்.

இதையடுத்து சிறுமியின் தந்தை சிலைமான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து இருவரையும் கஸ்டடியில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

சிறுவனின் தகாத செயலுக்கு தாயே உடந்தையாக இருந்ததால் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!