Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 16 செப்டம்பர், 2020

சோம்பேறிகள் எத்தனை பேர்

 ஒரு நாள் சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் ரவி ஏறி நின்று கொண்டு, ரவி மக்களைப் பார்த்து, அன்பார்ந்த நண்பர்களே? உங்களில் எத்தனை பேருக்கு உடல் உழைப்பு இல்லாமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைபடுகிறவர்களுக்கு நான் ஒரு வழி சொல்கிறேன். யாரெல்லாம் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறீர்களோ அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் என்றார் ரவி. அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.

 ரவி தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார். என்ன ரவி அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே? என்று மக்கள் கேட்டனர்.

நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு தெரிந்து விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன் என்று கூறியவாறே ரவி செல்லத் தொடங்கினார். அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக ரவி சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக