Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

மனித உடலில் எக்ஸ்-ரேவில் கண்டறியப்பட்ட 25 வினோதமான பொருட்கள்!

மனித உடலில் எக்ஸ் ரே மூலம் கண்டறியப்பட்ட வினோத பொருட்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

பொதுவாக எக்ஸ்ரே என்பது உடலில் உள்ள எழும்புகள் நுரையீரல்கள் போன்ற உறுப்புகளை காட்டுகிறது. உடலுக்குள் எதாவது பிரச்சனை என்றால் அதை அறிந்துக்கொள்ள எக்ஸ்ரே முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அவை சில விசித்திரமான காட்சிகளையும் காட்டியுள்ளன.

அப்படி என்ன விசித்திரம் என்றால் கத்திகள், மோதிரங்கள் முதல் செல்போன் வரை பல பொருட்களை இந்த எக்ஸ்ரேக்கள் மனித உடலில் இருந்து காட்டியுள்ளது. அப்படியான விசித்திரமான 25 எக்ஸ் ரே கதைகள் உங்களுக்காக.

25.பல்வலியை விட பெரிய வலி

பேட்ரிக் லாலர் என்பவர் தனக்கு பல்வலி இருப்பதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் எக்ஸ்ரே எடுத்தபோது அவரின் வாயில் கிளம்பி மூளை வரை சென்ற ஒரு ஆணியை கண்டு மருத்துவரே அதிர்ச்சியானார்.

24.திருமண மோதிரம்

நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ஒரு நபர் திருமணத்தின்போது தனது காதலியை ஏமாற்ற திருமண மோதிரத்தை மில்க் ஷேக்கில் மறைத்து வைத்தார். அன்று அவரது காதலி மிகவும் தாகமாக இருந்திருப்பார் போல. மோதிரம் இருப்பதை கூட அறியாமல் அந்த மில்க் ஷேக்கை அருந்திவிட்டார். கைகளில் இருக்க வேண்டிய மோதிரம் வயிற்றுக்குள் சென்றது.

23.கத்தி தலைக்காரன்

2008 ஆம் ஆண்டு பேருந்தில் பயணம் செய்த ஒருவர் அங்கு நடந்த கொள்ளையை தடுக்க முயன்றபோது தலையில் கத்திக்குத்து வாங்கினார். எக்ஸ் ரே எடுத்து பார்த்த போது முக்கால்வாசி கத்தி தலைக்குள் போயிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பிறகு அவர் முற்றிலும் குணமடைந்தார்.

22.ஆணி துப்பாக்கியால் கொல்லப்பட்டார்.

 Nail gun என்பது ஆணி அடிக்கக்கூடிய கருவியாகும். இதை வெளிநாடுகளில் ஆணி அடிப்பதற்கு பதிலாக பயன்படுத்துவர். 2008 ஆம் ஆண்டு சென் லியு என்பவர் இந்த Nail gunல் கொல்லப்பட்டார். அவரது தலையை எக்ஸ்ரே எடுத்தப்பொழுது அவரது தலை முழுக்க ஆணிகள் இருந்தன.

21.அடிவயிற்றில் கத்தரிக்கோல்

வயிற்று வழி என வந்தவருக்கு கத்தரிகோலை வைத்து அனுப்பிய கதை தெரியுமா உங்களுக்கு. பாட் ஸ்கின்னர் என்பவர் தனக்கு வயிற்று வழி இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 18 மாதங்கள் கழித்து அவர் மீண்டும் மருத்துவமனை வந்த போதுதான் மருத்துவர்கள் தங்களது காணாமல் போன கத்தரிகோலை கண்டறிந்தனர். அது அவரின் வயிற்றுக்குள் இருந்தது.

20.தலைக்குள் அம்பு

சீனாவில் தற்செயலாக ஒரு குழந்தையின் தலையில் அம்பு பாய்ந்தது. அந்த குழந்தையின் தலையை ஸ்கேன் செய்தபோது அம்பு அவரது கண் வழியாக புகுந்து அவரது மணடை ஓட்டின் பின்புறமாக வெளியே சென்றது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தை உயிர் பிழைத்தது.

19.தொண்டைக்குள் கத்தரிக்கோல்

சீனாவில் ஒருவர் உணவு அருந்திய பின்பு கத்தரிக்கோலை கொண்டு தனது பற்களை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர் ஒரு ஜோக் சொல்ல அதை கேட்டு அந்த மனிதர் சிரிக்கும்போது கத்தரிக்கோல் தவறுதலாக அவரது வாய்க்குள் சென்றது.

18.பாம்பின் வயிற்றில் கம்பி

மலைப்பாம்புகள் எதை வேண்டுமானாலும் விலுங்கிவிடும் என்பது உண்மைதான். இடாஹோவில் 12 அடி மலைபாம்பு மின்சார கம்பிகளை விழுங்கியிருந்தது. அவற்றை அகற்றுவதற்காக அதற்கு சிகிச்சை அளித்தபோது எக்ஸ் ரே செய்யப்பட்டது.

17.தலையில் ஏறிய கத்தி

ஒரு சிப்பாய்க்கு தலையில் புருவத்திற்கு அருகே 4 அங்குலத்திற்கு தலையின் உள்ளே கத்தி இறங்கியது. காப்பாற்றுவது கஷ்டம் என இருந்தாலும் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

16.கத்தி விழுங்கிய நாய்க்குட்டி

புளோரிடாவில் உள்ள ஒரு நாய்க்குட்டி 13 அங்குல கத்தியை விழுங்கியது. 4 நாட்கள் கழித்து அந்த கத்தி அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது.

15.வயிற்றுக்குள் போன பல்ப்

சிலருக்கு தங்கள் வயிற்றுக்குள் பல்பை எறியவிட கூட ஆர்வம் இருக்கும் போல. பாகிஸ்தானை சேர்ந்த ஒரு கைதி குண்டு பல்பை விழுங்கி விட்டார். பிறகு மருத்துவர்கள் அதை வெளியேற்றினர். ஆனால் அதுக்குறித்து அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

14.வயிற்றுக்குள் போன அழைப்பேசி

வயிற்றுக்குள் அழைப்பேசியை விடுவதன் மூலம் யாரையும் அழைக்க முடியாது என அந்த நபருக்கு தெரியாது போல. பாகிஸ்தான் கைதியை போலவே அழைப்பேசிக்கு தனது வயிற்றின் பெருங்குடலில் இடம் கொடுத்துள்ளார் அந்த மனிதர்.

13.தலையில் விழுந்த துளை

கட்டுமான தொழிலாளியான ரான் ஹன்ட் என்பவர் ஒரு ஏணியில் நின்று கொண்டு உயரமான பரப்பில் துளையிடும்போது அந்த கருவி திரும்பி கண் வழியாக புகுந்து தலையில் துளையை போட்டது. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக அவர் உயிர்பிழைத்தார்.

12.கற்களை விழுங்கிய காதலி

தன் காதலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சீனாவை சேர்ந்த ஒரு பெண் 20 காபுல்ஸ்டோன் என்னும் கற்களை விழுங்கினார். காதல் தோல்வி என்றாலும் கற்களை விழுங்குவது மோசமான விஷயமாகும்.

11.முகத்தில் சாவி

17 மாத குழந்தையான நிக்கோலஸ் என்பவரின் தலையில் அவரது தாயார் தொலைத்த சாவி இருந்தது. ஆனால் அது எப்படி நிகழ்ந்தது என யாராலும் அனுமானிக்க முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதாரம் இல்லாமல் அந்த சாவியானது எடுக்கப்பட்டது.

10.கண்ணில் கம்பி மாட்டிய நபர்

ஒரு நாள் மருத்துவ அவசர சிகிச்சை அறைக்கு இ ஜாவோ என்ற 57 வயது நபர் வருகை புரிந்தார். அப்போது அவரது குழாய் சரி செய்யும் கருவி அவரது கண்களில் மாட்டியிருந்தது. அது அவரது கண்களில் மிக மோசமான வகையில் இறங்கியிருந்தது.

09.பெரிய சிறுநீரக கல்

சிறுநீரக கல் என்றால் சிறியதாக இருக்கும் என கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 7 அங்குல சிறுநீரக கல்லை கேள்விப்பட்டுள்ளீர்களா? அதை அகற்றும்போது கிட்டத்தட்ட அது ஒரு நெருப்புக்கோழியின் முட்டை அளவு இருந்தததாம்.

08.ஸ்பிரிங் மற்றும் பேட்டரிகள்

சில சமயம் கைதிகளுக்கு மனநல பிரச்சனை ஏற்பட்டுவிடும் போல. கரோலினாவின் ராலேயில் உள்ள கைதிகள் வயிற்றில் ஸ்பிரிங் மற்றும் பேட்டரிகள் கண்டறியப்பட்டன.

07.வயிற்றுக்குள் குண்டு

வயிறு என்பது உண்வை மட்டுமே சேமிக்கும் பகுதியாகும். அவற்றில் பொருட்களை எல்லாம் சேமிக்க கூடாது. ஒருவர் தனது குடலில் துப்பாக்கி குண்டை தக்கவைத்துக்கொண்டார். ஆபரேஷன் மூலம் அந்த குண்டுகள் எடுக்கப்பட்டன. ஆனால் இறுதிக்கட்டத்தில் அந்த குண்டு வெடித்துவிடும் என வெடிகுண்டு பாதுகாப்பு குழுவை மருத்துவர்கள் அழைத்தனர்.

06.கரப்பான் பூச்சி

நீங்கள் திடீரென தெரியாமல் ஒரு கரப்பான் பூச்சியை விழுங்கிவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். என்ன செய்வீர்கள்? ஒரு கரப்பான் பூச்சியை விழுங்கிய இஸ்ரேலிய பெண் அந்த பூச்சி தனது தொண்டையில் நகர்வதை அறிந்து அதை கொல்வதற்காக முட் கரண்டியை பயன்படுத்தினார். ஆனால் இப்போது முட் கரண்டி தொண்டையில் சிக்கி கொண்டது. நல்லவேளை அவர் கரப்பான் கொல்லி மருந்தை பயன்படுத்தவில்லை என்கிற வரை மகிழ்ச்சி.

05.வண்ண மிட்டாய்கள்

எப்போதும் பளபளப்பான பொருட்களை குழந்தைகள் முன் வைக்க கூடாது. 8 வயதான ஹேலி லென்ட்ஸ் என்னும் சிறுமி வீட்டில் உள்ள பளபளப்பான பொருளை மிட்டாய் என நினைத்தார். ஆனால் அவை காந்தங்கள். பிறகு அவரது உடலை எக்ஸ் ரே செய்தபோது பல காந்தங்கள் அவரது உடலில் இருப்பது தெரியவந்தது.

04.கூர்மையான தலைவலி

தென் கொரியாவை சேர்ந்த ஒருவர், அவர் அவசர அறைக்கு தலைவலி காரணமாக கொண்டு வரப்பரட்டு ஸ்கேன் செய்தபோது அவரது தலையில் ஆணி இருந்தது தெரியவந்தது. உண்மையிலேயே இது கூர்மையான தலைவலி தான்.

03.தலையில் வெடிக்குண்டு

இதற்கெல்லாம் சாத்தியமே இல்லை என மனிதன் நினைக்கும் ஒரு எக்ஸ்ரே தான் இந்த மனிதனின் எக்ஸ்ரே. அவர் தலையில் எப்படி வெடிக்குண்டு போனது என யாருக்குமே தெரியவில்லை. ஏன் அந்த ராணுவ வீரருக்கே தெரியவில்லை.

02.தற்கொலை குண்டு

இதுவும் ஒரு வெடிக்குண்டு நிகழ்வுதான். ஆனால் இப்போது அந்த குண்டு வயிற்றில் குடிக்கொண்டுள்ளது. ஒரு பயங்கரவாதி அதை தன் வயிற்றில் சேமித்து வைத்திருந்தார்.

01.நாற்காலியின் கால்

ஷாஃபிக் எல்-பாஹ்க்ரிபார் என்பவர் 20 வயதான லியாம் பியர்ட் என்பவருடன் நடத்திய சண்டையில் அவரை நோக்கி நாற்காலியை வீசினார். அதன் விளைவாக நாற்காலியின் ஒரு கால் லியாமின் கண் இமை வழியே புகுந்து கழுத்தின் வழியாக வெளியே வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!