Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 8 அக்டோபர், 2020

டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

 யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது |  Yana Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil  Nativeplanet

ஜிரோ வில் உள்ள டால்லி பள்ளத் தாக்கு இயற் கையை ரசிப்ப தற்கு பல வாய்ப் புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற் கொள்ள புகழ் பெற்று விளங்கு கிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும். புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள டால்லி பள்ளத்தாக்குவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.

அருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள சிறுத்தை வகை பூனைகளும் அறிய வகை விலங்கினமாகும். இயற்கை தாவர பூங்காவில் பல கவர்ச்சிகரமான வகை ஆர்ச்சிட் மரங்கள் உள்ளன. நம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது. கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.

டால்லி பள்ளத்தாக்கு என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம். இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக் கும் வீடாக அமைந்திருக்கி றது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்தி லிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்ப டும் பல வகையான தாவரங் களும், விலங்கினமும் இயற்கை காதலர் களை கவர்ந்தி ழுக்கும் அம்சங்கள். இங்கு காணப் படும் அபடணி பழங்குடி யினர் இயற்கை கடவுளை வழிபடு கின்றனர்.

ஈர நில வேளாண் மை போக தங்கள் வாழ் வாதாரத்துக் காக கை வினைப் பொருள் கள் மற்றும் கைத்தறி பொருள் களையும் தயாரித்து விற்கின் றனர். மற்ற பழங்குடி யினரை போல இவர்கள் நாடோடி கள் அல்ல. இவர்கள் டால்லி பள்ளத்தாக்கு வட்டாரத்தில் நிரந்த ரமாக வசிக்கும் மக்களா வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!