குழந்தை பெற்ற தாய்மார்கள் பலருக்கு தாய்ப்பால் குறைவாக இருக்கின்றது. அப்படி அவர்களுக்கு தாய்ப்பால் குறைவாக இருப்பதற்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளும் ஒரு காரணமாக இருக்கும். அந்த வகையில் தாய்ப்பாலை அதிகரிக்க என்ன உணவுகள் எடுத்துக்கொள்ளலாம் என வாங்க பார்க்கலாம்.
பெருஞ்சீரகம் தாய்ப்பாலை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது.
பெருஞ்சீரகம் ஈஸ்ட்ரோஜன் அளவை சீர்படுத்த உதவுகிறது. பெருஞ்சீரகம் கொண்டு நீங்கள் தேநீர் கூடத் தயாரித்துக் குடிக்கலாம். தண்ணீரில் பெருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க விட்ட பின் அதில் சிறிதளவு தேனை விட்டுப் பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
வெந்தயம் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்க உதவும்.
வெந்தயம் உடல் சூட்டைத் தனிப்பதோடு ஈஸ்ட்ரோஜன் அளவையும் அதிகப் படுத்தும். ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை எடுத்து நீரில் நன்கு கொதிக்க விட்டு, அதில் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகி வந்தால் சில நாட்களிலேயே தாய்ப்பால் அளவு அதிகரிக்கும்
இல்லறவியல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக