Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 25 ஜனவரி, 2021

மூடநம்பிக்கை கொடூரம்: மகள்களை நிர்வாணமாக்கி நரபலி..! நள்ளிரவில் பயங்கரம்

 

ஆந்திர மாநிலத்தில் மூடநம்பிக்கையில் இரு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர்.

தேசிய பெண் குழந்தை தினத்தை நேற்று இந்தியாவே கொண்டாடிய நிலையில் மூடநம்பிக்கையால் இரண்டு மகள்களை நரபலி கொடுத்துள்ள பெற்றோரின் சம்பவம் ஆந்திர மாநிலத்தை புரட்டி போட்டுள்ளது.

​செல்வாக்கான குடும்பம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள சிவாநகர் காலனியில் வசித்து வருபவர்கள் மல்லுரு புருஷோத்தன் நாயுடு - பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தன் மதனப்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா தான் நடத்தி வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு அலெக்யா (27), சாய் திவ்யா (22) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

​கல்வியில் செழிப்பு

அலெக்யா இந்திய வன சேவை தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் கொரோனா ஊரடங்கினால் விடுப்பில் தனது சொந்த ஊருக்கு திரும்பியவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதுபோல, மூத்த மகள் சாய் திவ்யாவும் எம்பிஏ முதுகலைப் படிப்பை முடித்து, சென்னையில் உள்ள உள்ள மியூசிக் அகாடமியில் இசைப் படிப்பை துவங்கியுள்ளார்.

​இது போதாது

கல்வியிலும், செல்வத்திலும் செழித்துள்ள புருஷோத்தன் குடும்பத்தினர் வினோத பூஜைகளில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். தற்போது இருக்கும் வசதி வாய்ப்பை காட்டிலும் பலமடங்கு செல்வதை பெருக்கிக்கொள்ள பல்வேறு பூஜைகளை செய்து வந்துள்ளனர். அதன் உச்சமாக, மகள்களை நரபலி கொடுத்தால் ஏழேழு ஜென்மத்துக்கும் குடும்பம் செழிக்கும் என்று மந்திரவாதி ஒருவர் மூலம் மூட நம்பிக்கையை வளர்த்துள்ளனர்.

அதற்காக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி மகள்களை நரபலி கொடுக்க கடந்த ஞாயிற்று கிழமை அன்று திட்டமிட்டுள்ளனர் புருஷோத்தன் - பத்மஜா தம்பதி. அதன் படி ஞாயிற்றுகிழமை அன்று இரவு நரபலி பூஜை நடத்தப்பட்டுள்ளது. அப்போது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, அப்பகுதியில் உள்ளவர்கள் புருஷோத்தன் வீட்டின் முன்பு கூடியுள்ளனர்.

வெளியில் இருந்து இவர்கள் பலமுறை கூச்சலிட்டும், கதவு திறக்கப்படவில்லை. உடனே அப்பகுதியில் உள்ளவர்கள் சித்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

​உள்ளே சென்ற போலீசார்

பின்னர் கதவுடைத்து உள்ளே சென்ற போது, அலெக்யாவும், சாய் திவ்யாவும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் சாவகாசமாக பூஜை செய்துகொண்டிருந்த தம்பதியை கைது செய்ய முற்பட்டபோது, '' சில நாட்கள், பொறுமையாக இருங்கள், எங்களது மகள்கள் உயிர்த்தெழுவார்கள் என்று போலீசாரிடம் முறையிட்டுள்ளனர். இதற்கிடையில் மாவட்ட டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி பார்வையிட்டார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு மகள்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மூடநம்பிக்கையின் பேரில் மகள்களை இரக்கமின்று கொலை செய்த பெற்றோரையும், மந்திரவாதியையும் கைது செய்தனர்.

​கொலை நடந்தது எப்படி?

அதுகுறித்து, டிஎஸ்பி ரவி மனோகராச்சாரி விவரித்ததாவது, '' கடந்த மூன்று நாட்களாக இந்த வீட்டில் சில பூஜைகள் நடந்து வந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு, பூஜை முடிந்ததும், பெற்றோர்கள் முதலில் தங்கள் மூத்த மகள் அலெக்யாவை பூஜை அறையிலேயே கொன்றனர். ஒரு சிறிய செப்பு டம்ளர் மூலம் வாயை அடைத்து, பின்னர் தலையை தம்பிள்ஸ் மூலம் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்கள் இளைய மகளான சாய் திவ்யாவை வீட்டின் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று பலமுறை ஈட்டியால் குத்திக் கொலை செய்தனர்'' என கூறினார். 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!