Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 1 மார்ச், 2021

பெண் கேட்ட கேள்வி... அதிர்ந்து போன மேலாளர்... என்னவாக இருக்கும்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------------

கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!

-------------------------------------------------------

வங்கி மேலாளரிடம் ஒரு பெண் லோன் கேட்டு வந்தார்.

மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார்.

'எதுக்காகப் பணம் வேணும்...?"

அந்த பெண் பதில் சொன்னார். 'கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்...!"

 

'அடமானமாய் என்ன தருவீங்க...?" 

 

அந்த பெண்... லேசாய் குழப்பத்துடன் கேட்டார். 'அடமானம்னா என்ன..?"

 

'நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தா தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைதான் அடமானம்னு சொல்லுவோம்...!"

 

அந்த பெண் சொன்னார்... 'கொஞ்சம் நிலம் இருக்கு... ரெண்டு குதிரை இருக்கு... எது வேணுமோ அதை நீங்க எடுத்துக்கலாம்...!".

 

மேலாளர் இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நிலத்தை அடமானமாக வைத்துக் கொண்டு அவருக்குப் பணத்தை லோனாகத் தர ஏற்பாடு செய்தார்.

 

சில மாதங்கள் கழிந்தது. அந்த பெண் மீண்டும் பேங்கிற்கு வந்தார். தன்னுடைய கணக்குப் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்.

 

பைசா பாக்கியில்லாமல் கடன், வட்டி எல்லாவற்றையும் கணக்குப் போட்டு செட்டில் செய்தார்.

 

மேலாளர் ஆச்சரியத்துடன்...

 

'கடன் எல்லாவற்றையும் கட்டியாகிவிட்டது. லாபம் எதுவும் இல்லையா...?"

 

அந்த பெண் உற்சாகமாய் பதில் சொன்னார்.

 

'லாபம் இல்லாமலா...? அது கிடைச்சது நிறைய...!".

 

மேலாளர் ஆர்வத்துடன் கேட்டார்.

 

'அதை எல்லாம் என்ன செய்தீர்கள்..?".

 

'என்ன செய்யறது... பொட்டில போட்டு வச்சிருக்கேன்...!".

 

மேலாளர் யோசித்தார். 'இந்த மாச டார்கெட்க்கு சரியான ஆளாக இந்த பெண் கிடைச்சுட்டாள்...!" என்று நினைத்தபடியே 'ஏன் நீங்க பணத்தை எங்க பேங்க்ல டெபாசிட் பண்ணலாமே...?" என்றார்.

அந்த பெண் கேட்டார். 'டெபாசிட்னா என்ன...?"

மேலாளர் விளக்கமாய் பதில் சொன்னார்.

 

'நீங்க உங்க பேர்ல ஒரு கணக்கை ஆரம்பிச்சு... அதில உங்க பணத்தை போட்டு வச்சா... உங்க சார்பா பேங்க் உங்க பணத்தப் பாத்துக்கும். உங்களுக்கு எப்ப எப்ப பணம் தேவையோ அப்ப அப்ப நீங்க பணத்தை எடுத்துக்கலாம்...!"

கேட்டுக் கொண்டிருந்த அந்த பெண் சற்றே சேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்டார்.

 

'அடமானமாய் என்ன தருவீங்க?" 😎😎😇😇

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக