உருளைக்கிழங்கை வைத்து எந்தெந்த பொருட்களை எல்லாம் சுத்தம் செய்யலாம்?
ஊர்க்கோடாங்கி
புதன், ஏப்ரல் 21, 2021
நம் அனைவருக்கும்
பிடித்த காய்கறிகளில் முக்கியமான ஒன்று உருளைக்கிழங்கு ஆகும். சிறுவா் முதல்
பொியவா் வரை அனைவரும் உருளைக்கிழங்கை விரும்பி உண்பா். உருளைக்கிழங்கு மிகவும்
ருசியாக இருக்கும். உருளைக்கிழங்கை சமைக்கலாம், தண்ணீாில் வேக வைக்கலாம், தீயில்
வாட்டலாம், எண்ணெயில் பொாிக்கலாம். மொத்தத்தில் உருளைக்கிழங்கை எல்லா வகைகளிலும்
சமைத்து சாப்பிடலாம். அதனால்தான் உருளைக்கிழங்கை அனைவரும் விரும்பி உண்கின்றனா்.
உருளைக்கிழங்கு
சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக பொருட்களைச் சுத்தம் செய்வதற்கும்,
கறைகளை அகற்றுவதற்கும் பயன்படுகிறது. எந்தெந்தப் பொருட்களையெல்லாம் உருளைக்கிழங்கை
வைத்து சுத்தம் செய்யலாம் என்பதைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.
மூக்குக்
கண்ணாடியை சுத்தம் செய்தல்
மூக்குக் கண்ணாடி
அணிபவா்களுக்கு, அவா்களுடைய கண்ணாடியில், காற்று படலம் அல்லது தூசு படலம் பட்டு,
மங்கலாகத் தொிந்தால், அவா்கள் பொிதும் சிரமப்படுவா். அதிலும் குறிப்பாக
முகக்கவசம் அணிந்து கொண்டு கண்ணாடி அணிந்தால், மிக விரைவாக கண்ணாடி
மங்கலாகிவிடும். இந்நிலையில் உருளைக்கிழங்கைக் கொண்டு மிக எளிதாக கண்ணாடியை
சுத்தப்படுத்தலாம். அதாவது உருளைக்கிழங்கை லென்சின் உட்பகுதியில் தேய்த்தால்,
அதிலிருக்கும் ஸ்டாா்ச், கண்ணாடியில் உள்ள தூசுபடலத்தை மற்றும் காற்றுப் படலத்தை
விரைவாக சுத்தம் செய்து, கண்ணாடியை பளிச்சென்று மாற்றிவிடும்.
துருவை
நீக்குகிறது
துருப்பிடித்தால்,
அதை நீக்குவது என்பது கடினமான காாியம் ஆகும். துருப்பிடித்த கத்திகள் மற்றும்
கத்திாிக்கோள்களில் உருளைக்கிழங்கை வைத்து தேய்த்தால், அவற்றில் உள்ள துரு மிக
எளிதில் மறைந்துவிடும். உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெட்டப்பட்ட ஒரு பகுதியின் மேல் டிஷ் சோப்பு மற்றும் சமையல் சோடாவைத் தூவ
வேண்டும். இப்போது அந்த உருளைக்கிழங்குத் துண்டை துரு இருக்கும் இடத்தில் நன்றாக
துரு நீங்கும் வரை தேய்க்க வேண்டும். இப்போது அந்த இடத்தை தண்ணீரால் கழுவி, காய
வைத்தால் துரு காணாமல் போயிருக்கும்.
உடைந்த
கண்ணாடித் துண்டுகளைச் சுத்தம் செய்கிறது
உடைந்து சிதறி
கிடக்கும் கண்ணாடி துண்டுகள் மீது கண்டிப்பாக நமது பாதங்களை வைக்க மாட்டோம்.
தரையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடித் துண்டுகளை பொறுக்கி எடுப்பது மிகவும் கடினமாக
காாியம் ஆகும். ஒருசில துகள்கள் நம் கண்களுக்குத் தொியாத வகையில் மிகவும்
சிறியதாக இருக்கும். இந்த நிலையில் உருளைக்கிழங்கு இருந்தால், உடைந்த கண்ணாடித்
துகள்களை எளிதாக எடுக்க முடியும். அதாவது உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி எடுத்துக்
கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கின் வெட்டப்பட்ட பகுதியை கண்ணாடித் துகள்கள் மீது
அழுத்தினால், அவை உருளைக்கிழங்கோடு ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு மிக எளிதாக
உருளைக்கிழங்கை வைத்து உடைந்த கண்ணாடித் துகள்களை மிக எளிதாக சுத்தம் செய்யலாம்.
அவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக கையுறைகளை அணிய வேண்டும்.
வெள்ளியை
மெருகேற்றுகிறது
உருளைக்கிழங்கைத்
தண்ணீாில் வேக வைத்தால், அந்த தண்ணீரை கிழே ஊற்றிவிடக்கூடாது. ஏனெனில் அந்த
தண்ணீாில் இருக்கும் ஸ்டாா்ச், வெள்ளி பாத்திரங்களில் இருக்கும் கறைகளை மிக எளிதாக
நீக்கிவிடும். உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீாில், கறை படிந்திருக்கும் வெள்ளிப்
பாத்திரங்களை இட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அவற்றை எடுத்து துடைத்து,
காய வைத்தால் அவற்றில் உள்ள கறைகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
சிறிய
கறைகளை அகற்றுகிறது
சட்டைகளில்
சிவப்பு ஒயின் சிந்துவதால் ஏற்படும் பொிய அளவிலான கறைகளை உருளைக்கிழங்கால் நீக்க
முடியாது. ஆனால் சிறிய அளவிலான கறைகளை அகற்ற முடியும். அதாவது கிரீஸ் பட்ட
இடத்தில் ஏற்பட்டிருக்கும் கறையை, அது நீங்கும் அளவிற்கு உருளைக்கிழங்கு கொண்டு
தேய்த்தால், அந்த கிரீஸ் கறை நீங்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக