Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 18 மே, 2021

கோவின் இயங்குதளம் அடுத்த வாரம் முதல் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் இயங்கும் -மத்திய அரசு

 


கோவின் போர்ட்டல் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கப் பெறும், என்று சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. 

திங்களன்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையிலான கோவிட் -19 தொடர்பான உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் 26 வது கூட்டம் நடைபெற்றது.

இதில் கோவின் இயங்குதளம் இந்தி மற்றும் 14 பிராந்திய மொழிகளில் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கப் பெறும் என்றும் ,கோவிட் -19 இன் மாறுபாடுகளைக் கண்காணிக்க மேலும் 17 ஆய்வகங்கள் இன்சாக் நெட்வொர்க்கில் சேர்க்கப்படும் என்று சுகாதார அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  

இது பற்றி ஹர்ஷ் வர்தன் கூறுகையில்,பரிசோதனைக்குட்பட்ட  மாதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மேலும் இடஞ்சார்ந்த பகுப்பாய்வை அதிகரிக்கவும் இந்த 17 புதிய ஆய்வகங்கள் INSACOG நெட்வொர்க்கில் சேர்க்கப்பட உள்ளதாக  தெரிவித்தார். 

இந்த நெட்வொர்க் தற்போது நாட்டின் பல்வேறு மூலைகளில் அமைந்துள்ள 10 ஆய்வகங்களால் சேவை செய்யப்படுகிறது.

இந்தியாவின் புதிய கோவிட் -19  எண்ணிக்கை  26 நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக மூன்று லட்சத்துக்கும் கீழே குறைந்துவிட்டன என்றார் .  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக