---------------------------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
---------------------------------------------------------
ஆசிரியர் : நீ பெரியவனா ஆனா என்ன பண்ணுவ?
மாணவன் : கல்யாணம் பண்ணுவேன்.
ஆசிரியர் : இல்லப்பா.. நான் கேட்டது நீ பெரியவனா ஆன பின்ன என்ன ஆகுவ?
மாணவன் : மாப்பிள்ளை ஆகுவேன்.
ஆசிரியர் : அடேய்.. நீ பெரியவன் ஆகி என்ன சாதிக்கப்போற?
மாணவன் : லவ் பண்ணுவேன்.
ஆசிரியர் : முட்டாள்.. முட்டாள்.. நான் என்ன கேட்டேன்னா.. நீ பெரியவனாகி உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
மாணவன் : நல்ல மருமகளை கொண்டு வந்து கொடுப்பேன்.
ஆசிரியர் : உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பாக்குறாங்க?
மாணவன் : பேரன், பேத்திகள்.
ஆசிரியர் : கடவுளே.. முடியல.. உன் வாழ்க்கை குறிக்கோள் தான் என்ன?
மாணவன் : நாம் இருவர்.. நமக்கு இருவர்..
ஆசிரியர் : 😤😤
---------------------------------------------------------
பழமொழியும்... விளக்கமும்...!
---------------------------------------------------------
இமைக்குற்றம் கண்ணுக்குத்தெரியாது
நாம் அறிந்த விளக்கம் :
இமையின் குறைபாடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும், அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை. அதுபோல, தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. தன் முதுகு தனக்குத் தெரியாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக