Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 28 ஜூலை, 2021

Bangladesh vs Zimbabwe : கிரிக்கெட் போட்டியில் பேய் புகுந்ததா? வைரலாகும் வீடியோ...

வங்கதேசம் ஜிம்பாவேயிடையே நடந்த போட்டியில் பேய் வந்ததாக வெளியான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

ஜிம்பாவே - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி-20 போட்டியின் போது யாருமே தொடமல் தானாக ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ் கீழே விழுந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஜிம்பாவே - வங்கதேசம் இடையேயான டி-20 தொடர் ஜிம்பாவேயில் நடந்தது. 3 போட்டிகள் உள்ளஇந்த தொடரில் கடைசி போட்டி கடந்த 25ம் தேதி நடந்தது. போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் பிடிக்கும் போது 18வது ஓவரில் அந்த அணியின் பேட்ஸ் மேன் முகம்மது சைஃபுதீன் பேட்டிங்கில் இருந்தார். டென்டாய் சாதரா என்றபவர் பந்து வீசினார். 5வது பந்தில் பந்தை தன் பேட்டால் அடித்தார். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாக ஸ்டெம்பின் மீது இருந்த பைல்ஸ் கீழே விழுந்தது.

பேஸ்ட்ஸ்மேன் ஸ்டெம்பிலிருந்து தூரத்திலிருக்கிறார். பேட்டை வைத்து ஸ்டெம்பை தட்டியதாகவும், தெரியவில்லை. பந்தும் ஸ்டெம்ப் பக்கமே வரவில்லை. பைல்ஸ் கீழே விழும் சத்தம் கேட்டதும் பேஸ்ட்ஸ்மேன் என்ன நடந்தது. என ஒரு நிமிடம் திரும்பி பார்த்தார் அங்கிருந்த அம்பயர்களுக்கும் புரியவில்லை.

பின்னர் அவர்கள் ஆட்டத்தை நிறுத்தி மூன்றாவது அம்பயரிடம் என்ன நடந்தது என பார்க்க கூறி கேட்டனர். மூன்றாவது அம்பயர் பார்த்த போது தான் எந்த வித தொடர்பும் இல்லாமல் பைல்ஸ் மட்டும் கீழே விழுந்தது. தெரியவந்தது. இதை பார்த்ததும் 3வது அம்பயர் நாட் அவுட் கொடுத்துவிட்டார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, பேய் வந்து கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேனை அவுட் செய்ததாக கூறி வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்து என்ன கமெண்டில் சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக