சிரிக்கலாம் வாங்க...!!
------------------------------------------------------
கமல் : அவ்வளவு பெரிய வண்டியில அடிபட்டும் எப்படிங்க கத்தாம அமைதியா இருந்தீங்க?
விமல் : அது நடமாடும் நூலக வண்டிங்க. கத்தினா அபராதம் விதிப்பாங்களேன்னு பயந்துட்டேன்.
கமல் : 😖😖
------------------------------------------------------
தங்கமணி : மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு.. யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
ரங்கமணி : அப்புறம் என்ன ஆச்சு?
தங்கமணி : வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு.. தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.
ரங்கமணி : 😂😂
------------------------------------------------------
இன்றைய புதிர்...!!
------------------------------------------------------
1. ஒருவர் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும்போது அவரின் வலது பக்கம் சூரியன் மறைந்தது அப்போது அவர் சென்ற திசை என்ன?
2. ஒரு கூடையில் 6 கொய்யா பழங்கள் ஆறு பேருக்கு ஆளுக்கு ஒன்று என பிரித்து கொடுக்கப்பட்டது, இருப்பினும் ஒரு கொய்யா கூடையில் இருக்கிறது எப்படி?
3. ஒரு குளத்தில் 10 பூக்கள் அவை இன்று உள்ளதை போல் நாளை இருமடங்காகும். 20ஆம் நாள் குளம் முழுவதும் பூக்களாக இருந்தன. பாதி குளம் எத்தனையாவது நாளில் பூக்களால் நிரம்பியிருக்கும்?
விடை :
தெற்கு திசை.
அதில் ஒருவர் மட்டும் கூடையோடு அந்த 1 பழத்தை எடுத்து கொண்டார்.
19ஆம் நாளில்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக