Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 1 மார்ச், 2022

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் வைத்தீஸ்வரன் கோயில் நாகப்பட்டினம்

Vaidyanathar Temple : Vaidyanathar Vaidyanathar Temple Details |  Vaidyanathar- Vaitheeswaran koil | Tamilnadu Temple | வைத்தியநாதர்

இந்த கோயில் எங்கு உள்ளது?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்னும் ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 63 கி.மீ தொலைவில் வைத்தீஸ்வரன் கோயில் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. 5 பிரகாரங்களைக் கொண்ட இந்தக் கோயில் மேற்கு திசை நோக்கியது.

இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் புகழ்பெற்றது.

மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் உள்ளன.

பொதுவாக நவகிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 16வது தேவாரத்தலம் ஆகும்.

வேறென்ன சிறப்பு?

மற்ற கோயில்களில் நவகிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. அங்காரகன் (செவ்வாய்) பகவான் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

தைமாதம் - தை செவ்வாய் தினத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். வைகாசி 6 நாள் திருவிழா, மாதந்தோறும் பிரதோஷம், கிருத்திகை இத்தலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய்யை வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண வரம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தையல் நாயகிக்கு புடவை சாற்றுதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாற்றுதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது.

மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக