Ingredients
- வெங்காயம்-2
- தக்காளி-1
- பச்சைமிளகாய்-5
- இஞ்சி-தேவையான அளவு
- பூண்டு-7 pal
- கசகசா-1 ஸ்பூன்
- கரிப்பட்டை-தேவையான அளவு
- இலை-2
- பூ-தேவையான அளவு
- தேங்காய்த்துருவல்-அரை மூடி
- உப்பு-1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை -தேவையான அளவு
- கொத்தமல்லி-1 ஸ்பூன்
- பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்
- கொண்டக்கடலை-தேவையான அளவு
- சாம்பார் மிளகாய்த்தூள்-தேவையான அளவு
Method
Step 1
முதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
Step 2
எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும். அதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக