நான்கு நாட்களில் தலைவலியை ( Headache ) நீக்கும் அற்புதமான தைல எண்ணெய் !
"பொதுவாக தலைவலி ஏன் வருகிறது என்றால் உடலில் எங்கோ பிரச்சினை இருக்கிறது அதை சுட்டிக்காட்டும் ஒரு அலராம் தான் தலைவலி. இதற்காக தலைவலியை மறக்க செய்யும் மருந்துகளை சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்காது. வயிற்றில் மலக்கழிவு இருந்தாலும் தலைவலி வரும். இப்படி எந்தவிதமான காரணமும் இல்லாமல் வரும் தலைவலிக்கு என்ன மருந்து கொடுக்கலாம்"உடலில் வாதம் மற்றும் பித்தம் சம்பந்தமாக வரும் 36 பிரச்சினைகளுக்கும், ஒரு எண்ணெய் தைலம் செய்து தலையில் தேய்தால் குணமாகும் என்று இருந்தது. இந்த எண்ணெயை தேய்த்தால் முதலில் குணமாவது தலைவலி, கண் பார்வை தெளிவு, முடி உதிர்வை தடுக்க, தலையில் புற்று நோய் வராமல் தடுக்க , புதிதாக வெள்ளை முடி வராமல் இருக்க , உடல் சூடு குறைய இது போல் 36 வகையான நோய்களையும் போக்கும் ஒரு அற்புதமான தைலத்தைப் பற்றி இங்கு காண்போம்
தைலத்தை உருவாக்கும் முறை
- மரச்செக்கு நல்லஎண்ணெய் – 1 லிட்டர்
- பசும்பால் – 1 லிட்டர்
- பெரிய நெல்லிக்காய் சாறு – 1 லிட்டர்
- மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு – 1 லிட்டர்
- அயபானி செடி காய வைத்த இலை – 300 கிராம்
- சிறு சஞ்சீவி செடி காய வைத்த இலை – 100 கிராம்
மேலே குறிப்பிட்ட அனைத்து சரக்குகளையும் நன்றாக அடுப்பில் கலந்து மிதமான தீயில் வைத்து சரியாக மூன்றிலிருந்து ஐந்து மணி நேரம் எரித்து தைலைத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இரவு படுக்கும் போது இந்த தைல எண்ணையை தலையில் தேய்த்தால் பல நோய்கள் நம்மை விட்டு விலகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக