தேவையானவை:
- கேரட்
- பீன்ஸ்
- நூக்கல்
- வெங்காயம்
- தக்காளி - தலா 100 கிராம் (நறுக்கியது)
- இஞ்சி
- பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- சோம்பு
- பட்டைப் பொடி - தலா சிறிதளவு
- மிளகாய்த் தூள்
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அரைக்க:
- தேங்காய் - 1 (துருவியது)
- முந்திரி - 10 கிராம்
- சோம்பு - 5 கிராம்
தாளிக்க:
- ஏலக்காய்பி
- ரிஞ்சி இலை - தலா இரண்டு
- கிராம்பு - ஐந்து
- பட்டை
- சாதிபத்திரி - சிறிதளவு
செய்முறை:
எண்ணெயைச் சூடாக்கித் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர், சோம்பு, பட்டைப் பொடி, மிளகாய்த் தூள் சேர்த்து வேகவிட்டு, அரைத்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
பலன்கள்: இவை கிழங்கு அல்லாத இயற்கை முறை பசும் காய்கறிகளாக இருக்க வேண்டும். அனைத்துக் காய்கறிகளும் சேரும்போது, கால்சியம், பொட்டாசியம், சோடியம், தாது உப்புகள் நிறைந்து இருக்கும். அவை நமது உள் உறுப்புக்குத் தேவையான நுண் சத்துக்களைக் கொடுக்கும். நார்ச் சத்தும் நிறைந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக