Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

பதினெட்டாவது அத்தியாயம் (மோட்ச சன்யாஸ யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை





Sri Math Bhagavad Gita




॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அதாஷ்டாதஷோ அத்யாய:।

மோட்ச சன்யாஸ யோகம்


(கடமை மூலம் கடவுள்)

அர்ஜுன உவாச।
ஸம்ந்யாஸஸ்ய மஹாபாஹோ தத்த்வமிச்சாமி வேதிதும்।
த்யாகஸ்ய ச ஹ்ருஷீகேஷ ப்ருதக்கேஷிநிஷூதந॥ 18.1 ॥

அர்ஜுனன் கூறினான்: தோள்வலிமை மிக்கவனே ! கிருஷ்ணா ! கேசி என்ற அசுரனை கொன்றவனே ! சன்னியாசம், தியாகம் இரண்டின் உட்பொருளையும் தனித்தனியாக அறிய விரும்புகிறேன். 




ஸ்ரீபகவாநுவாச।

காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸம்ந்யாஸம் கவயோ விது:।
ஸர்வகர்மபலத்யாகம் ப்ராஹுஸ்த்யாகம் விசக்ஷணா:॥ 18.2 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: ஆசை வசப்பட்டு செய்கின்ற செயல்களை விடுவது சன்னியாசம் என்று மகான்கள் அறிகிறார்கள். செயல்களின் பலனை விட்டுவிடுவது தியாகம் என்று தீர்க்கதரிசிகள் சொல்கிறார்கள். 

த்யாஜ்யம் தோஷவதித்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண:।
யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே॥ 18.3 ॥

எல்லா செயல்களும் குற்றம் உடையவை. எனவே எல்லாம் துறக்கபட வேண்டியவை என்று ஒருசிலர் கூறுகின்றனர். வழிபாடு, தானம், தவம் போன்றவற்றவை துறக்ககூடாது என்று வேறு சிலர் கூறுகின்றனர். 

நிஷ்சயம் ஷ்ருணு மே தத்ர த்யாகே பரதஸத்தம।
த்யாகோ ஹி புருஷவ்யாக்ர த்ரிவித: ஸம்ப்ரகீர்தித:॥ 18.4 ॥

பரதகுலத்தில் சிறந்தவனே ! தியாக விஷயத்தில் எனது உறுதியான கருத்தை கேள். ஆண்களில் புலி போன்றவனே ! தியாகம் மூன்று விதம் என்று கூறப்பட்டுள்ளது. 

யஜ்ஞதாநதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத்।
யஜ்ஞோ தாநம் தபஷ்சைவ பாவநாநி மநீஷிணாம்॥ 18.5 ॥

வழிபாடு, தானம், தவம் ஆகிய செயல்கள் விடுவதற்கு உரியவை அல்ல. இவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். இவை சான்றோர்களை( அதாவது உரிய விதத்தில் செய்பவர்களை ) புனிதபடுத்துபவை. 

ஏதாந்யபி து கர்மாணி ஸங்கம் த்யக்த்வா பலாநி ச।
கர்தவ்யாநீதி மே பார்த நிஷ்சிதம் மதமுத்தமம்॥ 18.6 ॥

அர்ஜுனா ! இந்த செயல்களையும் கூட பற்றை விட்டும் பலனை எதிர்பாராமலும் செய்ய வேண்டும் என்பது எனது உறுதியானதும் மேலானதுமான கருத்தாகும். 



நியதஸ்ய து ஸம்ந்யாஸ: கர்மணோ நோபபத்யதே।
மோஹாத்தஸ்ய பரித்யாகஸ்தாமஸ: பரிகீர்தித:॥ 18.7 ॥

விதித்த கடமையை விடுவது சரியல்ல. மனத்தெளிவின்மை காரணமாக அவ்வாறு விடுவது தாமச தியாகம். 

து:கமித்யேவ யத்கர்ம காயக்லேஷபயாத்த்யஜேத்।
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாகம் நைவ த்யாகபலம் லபேத்॥ 18.8 ॥

துன்பமாக இருக்கிறது என்ற காரணத்தாலும், உடம்பிற்கு தொந்தரவு என்ற பயத்தாலும் செயல்களை விடுவது ராஜச தியாகம். இந்த தியாகத்தினால் தியாகத்திற்கு உரிய பலன் கிடைப்பதில்லை. 

கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதே அர்ஜுன।
ஸங்கம் த்யக்த்வா பலம் சைவ ஸ த்யாக: ஸாத்த்விகோ மத:॥ 18.9 ॥

அர்ஜுனா ! சாதாரண செயல்களையே, அவை செய்யப்பட வேண்டியவை என்பதற்காக, பற்றையும் பலனையும் விட்டு செய்தால் அது சாத்வீக தியாகம். 

ந த்வேஷ்ட்யகுஷலம் கர்ம குஷலே நாநுஷஜ்ஜதே।
த்யாகீ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதாவீ சிந்நஸம்ஷய:॥ 18.10 ॥

சத்வம் நிறைந்த, உண்மையறிவுடைய, சந்தேகம் நீங்கபெற்ற, தியாக சிந்தனை உடைய ஒருவன், துன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை வெறுப்பதில்லை. இன்பம் தருவது என்பதற்காக ஒரு செயலை விரும்புவதும் இல்லை. 



ந ஹி தேஹப்ருதா ஷக்யம் த்யக்தும் கர்மாண்யஷேஷத:।
யஸ்து கர்மபலத்யாகீ ஸ த்யாகீத்யபிதீயதே॥ 18.11 ॥

சாதாரண மனிதனால் செயல்களை அறவே விடுவது இயலாது. யார் வினைபயனை விட்டவனோ அவனே தியாகி. 

அநிஷ்டமிஷ்டம் மிஷ்ரம் ச த்ரிவிதம் கர்மண: பலம்।
பவத்யத்யாகிநாம் ப்ரேத்ய ந து ஸம்ந்யாஸிநாம் க்வசித்॥ 18.12 ॥

பற்றுடன் வேலை செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு இன்பமானது, துன்பமானது, இரண்டும் கலந்தது என்று மூன்று விதமான வினைபயன்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் பற்றை விட்டவர்களுக்கு ஒருபோதும் இந்த அனுபவங்கள் இல்லை. 

பம்சைதாநி மஹாபாஹோ காரணாநி நிபோத மே।
ஸாங்க்யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்தயே ஸர்வகர்மணாம்॥ 18.13 ॥

பெரும்தோள் உடையவனே ! கர்மம் இது என்று கூறுகின்ற சாங்கிய தத்துவத்தில் எல்லா கர்மங்களின் நிறைவிற்க்காக கூறப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்களை என்னிடமிருந்து அறிந்து கொள். 

அதிஷ்டாநம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்।
விவிதாஷ்ச ப்ருதக்சேஷ்டா தைவம் சைவாத்ர பம்சமம்॥ 18.14 ॥

உடம்பு, தன்முனைப்பு, பல்வேறு உறுப்புகள், பலவிதமான செயல்பாடுகள் இவற்றுடன் ஐந்தாவதாக தேவ சக்திகள் ஆகியவையே ஒரு கர்மத்திர்க்கு நிபந்தனைகள் ஆகின்றன. 



ஷரீரவாங்மநோபிர்யத்கர்ம ப்ராரபதே நர:।
ந்யாய்யம் வா விபரீதம் வா பம்சைதே தஸ்ய ஹேதவ:॥ 18.15 ॥

நியாயமானதோ, அநியாயமானதோ எந்த கர்மத்தையானாலும் சரி, உடலால், வாக்கால், மனத்தால் மனிதன் தொடங்கினால் அதற்கு இந்த ஐந்தும் காரணமாக அமைகின்றன. 

தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய:।
பஷ்யத்யக்ருதபுத்தித்வாந்ந ஸ பஷ்யதி துர்மதி:॥ 18.16 ॥

அது அப்படி இருக்க, தெளிவற்ற புத்தியின் காரணமாக யார் இறைவனை கர்த்தாவாக காண்கிறானோ அந்த மூடன் உண்மையை காண்பதில்லை. 

யஸ்ய நாஹம்க்ருதோ பாவோ புத்திர்யஸ்ய ந லிப்யதே।
ஹத்வா அபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிபத்யதே॥ 18.17 ॥

நான் செய்கிறேன் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ, யாருடைய மனம் பற்றற்றதோ அவன் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் கொன்றாலும் கொன்றவன் ஆகமாட்டான். அந்த செயலால் வரும் பந்தமும் அவனுக்கு இல்லை. 

ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோதநா।
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித: கர்மஸம்க்ரஹ:॥ 18.18 ॥

அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் என்று கர்ம தூண்டுதல் மூன்று விதம். கருவி, செயல், செய்பவன் என்று செயலின் ஆதாரம் மூன்று விதம். 



ஜ்ஞாநம் கர்ம ச கர்தாச த்ரிதைவ குணபேதத:।
ப்ரோச்யதே குணஸங்க்யாநே யதாவச்ச்ருணு தாந்யபி॥ 18.19 ॥

அறிவும் செயலும் செய்பவனும் குண வேறுப்பாட்டால் மூவகை என்று குணங்களை பற்றி கூறுவதான சாங்கிய சாஸ்திரத்தில் சொல்லபட்டுருக்கிறது. அவற்றையும் உள்ளபடி கேள். 

ஸர்வபூதேஷு யேநைகம் பாவமவ்யயமீக்ஷதே।
அவிபக்தம் விபக்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ஸாத்த்விகம்॥ 18.20 ॥

வெவேறான உயிரினங்களில் வேறுபாடற்ற அழியாத ஒரே உணர்வை காண்கின்ற அறிவு சாத்வீக அறிவு. 

ப்ருதக்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபாவாந்ப்ருதக்விதாந்।
வேத்தி ஸர்வேஷு பூதேஷு தஜ்ஜ்ஞாநம் வித்தி ராஜஸம்॥ 18.21 ॥

வெவ்வேறு உயிரினங்களை ஒன்றிலிருந்து ஒன்று வேறானதாக அறிகின்ற அறிவு ராஜச அறிவு. 

யத்து க்ருத்ஸ்நவதேகஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம்।
அதத்த்வார்தவதல்பம் ச தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.22 ॥

ஒரு பகுதியையே எல்லாம் என்று விடாபிடியாக பற்றி கொண்டு இருக்கின்ற, யுக்திக்கு பொருந்தாத, உண்மைக்கு பொருந்தாத, அற்பமான அறிவு தாமச அறிவு. 



நியதம் ஸங்கரஹிதமராகத்வேஷத: க்ருதம்।
அபலப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே॥ 18.23 ॥

பலனில் ஆசை வைக்காமல், பற்றின்றி, விருப்பு வெறுப்பு இன்றி, தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமையை செய்வது சாத்வீக செயல். 

யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹம்காரேண வா புந:।
க்ரியதே பஹுலாயாஸம் தத்ராஜஸமுதாஹ்ருதம்॥ 18.24 ॥

ஆசை வசப்பட்டு, தன்முனைப்புடன் மிகவும் பாடுபட்டு செய்ய செய்யபடுவது ராஜச செயல். 

அநுபந்தம் க்ஷயம் ஹிம்ஸாமநபேக்ஷ்ய ச பௌருஷம்।
மோஹாதாரப்யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே॥ 18.25 ॥

செயலின் விளைவையும் நஷ்டத்தையும் துன்பத்தையும் சொந்த ஆற்றலையும் எண்ணி பாராமல் மனமயக்கத்தால் தொடங்கபடுவது தாமச செயல். 

முக்தஸங்கோ அநஹம்வாதீ த்ருத்யுத்ஸாஹஸமந்வித:।
ஸித்த்யஸித்த்யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே॥ 18.26 ॥

பற்றற்றவன், அகங்காரம் இல்லாதவன், உறுதியும் ஊக்கமும் உடையவன், வெற்றி தோல்வியில் மாறுபடாதவன் சாத்வீக கர்த்தா. 

ராகீ கர்மபலப்ரேப்ஸுர்லுப்தோ ஹிம்ஸாத்மகோ அஷுசி:।
ஹர்ஷஷோகாந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித:॥ 18.27 ॥

ஆசை வசபட்டவன், வினைபயனை நாடுபவன், கருமி, துன்பம் செய்பவன், தூய்மையற்றவன், மகிழ்ச்சியும் கவலையும் கொள்பவன் ராஜச கர்த்தா. 

அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்த: ஷடோ நைஷ்க்ருதிகோ அலஸ:।
விஷாதீ தீர்கஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே॥ 18.28 ॥

ஒருமை படாத மனத்தினன், விவேகமற்றவன், முரடன், வஞ்சகன், பிறரது வேலையை கெடுப்பவன், சோம்பேறி, கவலையில் மூழ்கியவன், காலதாமதம் செய்பவன் தாம்ச கர்த்தா. 

புத்தேர்பேதம் த்ருதேஷ்சைவ குணதஸ்த்ரிவிதம் ஷ்ருணு।
ப்ரோச்யமாநமஷேஷேண ப்ருதக்த்வேந தநம்ஜய॥ 18.29 ॥

புத்தி மற்றும் மன உறுதியின் தன்மைகளுக்கு ஏற்ப மூன்று விதமான வேறுபட்ட கண்ணோட்டங்களை தனித்தனியாக முற்றிலும் சொல்கிறேன் கேள். 

ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே பயாபயே।
பந்தம் மோக்ஷம் ச யா வேத்தி புத்தி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.30 ॥

அர்ஜுனா ! உலகியல் வாழ்க்கை – முக்திபாதை, செய்ய தகாதது – செய்ய தக்கது, பயம் – பயமின்மை, பந்தம் – மோட்சம் ஆகியவற்றிக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது சாத்வீக புத்தி. 



யயா தர்மமதர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச।
அயதாவத்ப்ரஜாநாதி புத்தி: ஸா பார்த ராஜஸீ॥ 18.31 ॥

அர்ஜுனா ! தர்மத்தையும் அதர்மத்தையும் செய்ய தக்கதையும் செய்ய தகாததையும் தாறுமாறாக அறிவது ராஜச புத்தி. 

அதர்மம் தர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா।
ஸர்வார்தாந்விபரீதாம்ஷ்ச புத்தி: ஸா பார்த தாமஸீ॥ 18.32 ॥

அர்ஜுனா ! அறியாமை இருளால் மூடபெற்று அதர்மத்தை தர்மம் என்றும் எல்லாவற்றையும் விபரிதமாகவும் அறிவது தமாச புத்தி. 

த்ருத்யா யயா தாரயதே மந:ப்ராணேந்த்ரியக்ரியா:।
யோகேநாவ்யபிசாரிண்யா த்ருதி: ஸா பார்த ஸாத்த்விகீ॥ 18.33 ॥

அர்ஜுனா ! யோக வாழ்கையின் விளைவாக வருவது சாத்வீக உறுதி. பிறழாத அந்த உறுதியால் மனம், பிராணம் மற்றும் புலன்களின் செயல்பாடுகளை ஒருவன் நெறிபடுத்துகிறான். 

யயா து தர்மகாமார்தாந்த்ருத்யா தாரயதே அர்ஜுன।
ப்ரஸங்கேந பலாகாங்க்ஷீ த்ருதி: ஸா பார்த ராஜஸீ॥ 18.34 ॥

குந்தியின் மகனே அர்ஜுனா ! எந்த உறுதியால் ஒருவன் அறம், இன்பம், பொருள் இவற்றை காக்கிறானோ, மிகுந்த பற்றுதலின் காரணமாக பலனை நாடுகிறானோ அது ராஜச உறுதி. 



யயா ஸ்வப்நம் பயம் ஷோகம் விஷாதம் மதமேவ ச।
ந விமும்சதி துர்மேதா த்ருதி: ஸா பார்த தாமஸீ॥ 18.35 ॥

அர்ஜுனா ! மூடன் கொல்வது தாமச உறுதி . அந்த உறுதியால் தூக்கம், பயம், கவலை, மனக்கலக்கம், கர்வம் இவற்றை அவன் விடாபிடியாக பற்றிக்கொண்டு வாழ்கிறான். 

ஸுகம் த்விதாநீம் த்ரிவிதம் ஷ்ருணு மே பரதர்ஷப।
அப்யாஸாத்ரமதே யத்ர து:காந்தம் ச நிகச்சதி॥ 18.36 ॥

யத்ததக்ரே விஷமிவ பரிணாமே அம்ருதோபமம்।
தத்ஸுகம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபுத்திப்ரஸாதஜம்॥ 18.37 ॥

அர்ஜுனா ! மூவகை இன்பங்களை கேள். சாத்வீக இன்பம் ஆன்மாவில் நிலைபெற்ற புத்தியின் தெளிவினால் கிடைப்பது. ஆரம்பத்தில் விஷம் போலவும் முடிவில் அமுதம் போன்றும் இருப்பது. தொடர்ந்த பயிற்சியால் அது துக்கம் என்பதே இல்லாமல் செய்கிறது. 

விஷயேந்த்ரியஸம்யோகாத்யத்ததக்ரே அம்ருதோபமம்।
பரிணாமே விஷமிவ தத்ஸுகம் ராஜஸம் ஸ்ம்ருதம்॥ 18.38 ॥

பொருட்களும் புலன்களும் தொடர்புகொள்வதன் காரணமாக வருவதும், ஆரம்பத்தில் அமுதம் போன்றும் முடிவில் விஷம் போன்றும் இருப்பதும் ராஜச இன்பம். 

யதக்ரே சாநுபந்தே ச ஸுகம் மோஹநமாத்மந:।
நித்ராலஸ்யப்ரமாதோத்தம் தத்தாமஸமுதாஹ்ருதம்॥ 18.39 ॥

தாமச இன்பம் ஆரம்பத்திலும் முடிவிலும் மனமயக்கம் தருகிறது. துக்கம், சோம்பல், தடுமாற்றம் ஆகியவற்றிலிருந்து தோன்றுகிறது. 



ந ததஸ்தி ப்ருதிவ்யாம் வா திவி தேவேஷு வா புந:।
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதேபி: ஸ்யாத்த்ரிபிர்குணை:॥ 18.40 ॥

இயற்கையிலிருந்து தோன்றிய இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்ட உயிரினங்கள் பூமியிலோ, சொர்க்கதிலோ, தேவலோகத்திலோ இல்லை. 

ப்ராஹ்மணக்ஷத்ரியவிஷாம் ஷூத்ராணாம் ச பரம்தப।
கர்மாணி ப்ரவிபக்தாநி ஸ்வபாவப்ரபவைர்குணை:॥ 18.41 ॥

எதிரிகளை எரிப்பவனே ! மன இயல்பிலிருந்து பிறந்த குணங்களுக்கு ஏற்ப பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களின் வேலைகள் பிரிக்கபட்டிருக்கின்றன. 

ஷமோ தமஸ்தப: ஷௌசம் க்ஷாந்திரார்ஜவமேவ ச।
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம்॥ 18.42 ॥

மனக்கட்டுப்பாடு, புலனடக்கம், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, கற்றறிவு, அனுபவ அறிவு, ஆன்ம நாட்டம் ஆகியவை இயல்பாக பிராமணனுக்கு உரியவை. 

ஷௌர்யம் தேஜோ த்ருதிர்தாக்ஷ்யம் யுத்தே சாப்யபலாயநம்।
தாநமீஷ்வரபாவஷ்ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபாவஜம்॥ 18.43 ॥

பராக்கிரமம், மன ஆற்றல், செயல்திறன், சாதுர்யம், போரில் புறம்கட்டமை, கொடை, ஆளும் திறமை ஆகியவை இயல்பாக க்ஷத்திரியனுக்கு உரிய செயல்கள். 



க்ருஷிகௌரக்ஷ்யவாணிஜ்யம் வைஷ்யகர்ம ஸ்வபாவஜம்।
பரிசர்யாத்மகம் கர்ம ஷூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்॥ 18.44 ॥

விவசாயம், மாடுகளை காத்தல், வாணிபம் ஆகியவை இயல்பாக வைசியனுக்கு உரிய செயல்கள். சூத்திரனுக்கு இயல்பானது குற்றேவல் செயல்கள். 

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥

தனக்குரிய கடமைகளில் இன்பம் காண்கின்ற மனிதன் நிறைநிலையை அடைகிறான். கடமையை செய்பவன் எப்படி நிறைநிலையை அடைகிறான் என்பதை கேள். 

யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥

யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளனவோ, யாரால் இந்த பிரபஞ்சம் எல்லாம் வியாப்பிக்கபட்டிருக்கிறதோ அவரை தனது கடமையால் அர்ச்சித்து, மனிதன் இறைநிலையை அடைகிறான். 

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥

மன இயல்பிற்கு ஏற்ற வேலை நிறைவானதாக இல்லாமல் போகலாம். பிறர் வேலை நிறைவுடன் செய்ய தக்கதாக இருக்கலாம். இருப்பினும் தனக்குரிய வேலையை செய்வதே சிறந்தது. சொந்த இயல்பிற்கு ஏற்ற செயலை செய்பவன் கேட்டை அடைவதில்லை. 



ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥

குந்தியின் மகனே ! குறையுடன் கலந்ததாக இருந்தாலும் மன இயல்பிற்கேற்ப வேலையை விடக்கூடாது. ஏனெனில் நெருப்பு புகையால் சூழபட்டிருப்பது போல் எல்லா செயல்களும் குறையால் சூழப்பட்டுள்ளது. 

அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥

( இயல்பிற்கேற்ற வேலையையும் ) முற்றிலும் பற்றற்று மனத்தை வசபடுத்தி, ஆசைகளை விட்டு செய்பவன் துறவின் மூலம் கிடைப்பதான செயலில் செயலின்மை காண்கின்ற மேலான நிலையை அடைகிறான். 

ஸித்திம் ப்ராப்தோ யதா ப்ரஹ்ம ததாப்நோதி நிபோத மே।
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா ஜ்ஞாநஸ்ய யா பரா॥ 18.50 ॥

குந்தியின் மகனே ! ( செயலில் செயலின்மை காண்கின்ற ) உயர் நிலையை அடைந்தவன் ஞானத்தின் மேலான முடிவாகிய இறைவனை எப்படி அடைகிறானோ அதை சுருக்கமாக கூறுகிறேன். 



புத்த்யா விஷுத்தயா யுக்தோ த்ருத்யாத்மாநம் நியம்ய ச।
ஷப்தாதீந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராகத்வேஷௌ வ்யுதஸ்ய ச॥ 18.51 ॥

விவிக்தஸேவீ லக்வாஷீ யதவாக்காயமாநஸ:।
த்யாநயோகபரோ நித்யம் வைராக்யம் ஸமுபாஷ்ரித:॥ 18.52 ॥

அஹம்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் பரிக்ரஹம்।
விமுச்ய நிர்மம: ஷாந்தோ ப்ரஹ்மபூயாய கல்பதே॥ 18.53 ॥

தூய புத்தியுடன், உறுதியாக தன்னை அடக்கி, ஒளி முதலான விஷயங்களை விட்டு, விருப்பு வெறுப்பை நீக்கி, தனிமையில் இருந்து, மிதமாக உண்டு, சொல் செயல் மனம் இவற்றை கட்டுபடுத்தி, எப்போதும் தியான யோகத்தில் திளைத்திருந்து காமம் கோபம் உடைமை இவற்றை விட்டு எனதென்பது இல்லாமல் சாந்தமாக இருப்பவன் சமகாட்சி நிலையை அடைவதற்கு தகுதி உடையவன். 

ப்ரஹ்மபூத: ப்ரஸந்நாத்மா ந ஷோசதி ந காங்க்ஷதி।
ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்பக்திம் லபதே பராம்॥ 18.54 ॥

சமகாட்சி நிலையில் உறுதிபெற்ற, தெளிந்த மனம் உடைய அவன் கவலைபடுவதில்லை, ஆசை கொள்வதில்லை. எல்லா உயிர்களிடமும் சமமாக இருக்கின்ற அவன் என் மீது உயர்ந்த பக்தியை அடைகிறான். 

பக்த்யா மாமபிஜாநாதி யாவாந்யஷ்சாஸ்மி தத்த்வத:।
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஷதே ததநம்தரம்॥ 18.55 ॥

நான் யார், எப்படிபட்டவன் என்பதை உள்ளது உள்ளபடி பக்தியால் அவன் அறிகிறான். அவ்வாறு என்னை உள்ளபடி அறிந்த பிறகு விரைவில் என்னை அடைகிறான். 



ஸர்வகர்மாண்யபி ஸதா குர்வாணோ மத்வ்யபாஷ்ரய:।
மத்ப்ரஸாதாதவாப்நோதி ஷாஷ்வதம் பதமவ்யயம்॥ 18.56 ॥

எப்போதும் என்னை சரணடைந்து, எல்லா வேலைகளையும் செய்பவன் நிலையான குறையற்ற நிலையை எனதருளால் அடைகிறான். 

சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।
புத்தியோகமுபாஷ்ரித்ய மச்சித்த: ஸததம் பவ॥ 18.57 ॥

எல்லா வேலைகளையும் மனத்தால் என்னிடம் வைத்து, என்னையே கதியாக கொண்டு, புத்தி யோகத்தின் மூலம் எப்போதும் என்னில் நிலைபெற்றவனாக ஆவாய். 

மச்சித்த: ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி।
அத சேத்த்வமஹம்காராந்ந ஷ்ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி॥ 18.58 ॥

என்னில் மனத்தை வைத்தால் எல்லா தடைகளையும் எனதருளால் தாண்டி செல்வாய். மாறாக அகங்காரத்தின் காரணமாக என் பேச்சை கேட்காவிட்டால் அழிவாய். 

யதஹம்காரமாஷ்ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே।
மித்யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி॥ 18.59 ॥

அகங்காரத்தின் வசப்பட்டு, போர் செய்ய மாட்டேன் என்று நினைத்தால் உனது அந்த முடிவு வீணானது. உன் மன இயல்பே உன்னை போரில் ஈடுபடுத்தி விடும். 



ஸ்வபாவஜேந கௌந்தேய நிபத்த: ஸ்வேந கர்மணா।
கர்தும் நேச்சஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஷோபி தத்॥ 18.60 ॥

குந்தியின் மகனே ! எதை செய்வதற்கு மனகுழப்பத்தின் காரணமாக தயங்குகிறாயோ, அதையே மன இயல்பின் காரணமாக தோன்றிய வினைபயனால் கட்டுண்டு, தன்வசம் இல்லாமல் செய்வாய். 

ஈஷ்வர: ஸர்வபூதாநாம் ஹ்ருத்தேஷே அர்ஜுன திஷ்டதி।
ப்ராமயந்ஸர்வபூதாநி யந்த்ராரூடாநி மாயயா॥ 18.61 ॥

அர்ஜுனா ! இறைவன் எல்லா உயிர்களின் இதயத்தில் இருக்கிறார். எல்லா உயிர்களையும் தனது சக்தியால் எந்திரத்தில் சுழற்றுவது போல் ஆட்டி வைக்கிறார். 

தமேவ ஷரணம் கச்ச ஸர்வபாவேந பாரத।
தத்ப்ரஸாதாத்பராம் ஷாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி ஷாஷ்வதம்॥ 18.62 ॥

அர்ஜுனா ! இறைவனையே எல்லா விதத்திலும் சரணடை. அவரது அருளால் மேலான அமைதியையும் அழிவற்ற நிலையையும் அடைவாய். 

இதி தே ஜ்ஞாநமாக்யாதம் குஹ்யாத்குஹ்யதரம் மயா।
விம்ருஷ்யைததஷேஷேண யதேச்சஸி ததா குரு॥ 18.63 ॥

ரகசியங்களுள் மேலான ரகசியத்தை இவ்வாறு நான் உனக்கு சொன்னேன். இதை நன்றாக ஆராய்ந்து எப்படி விரும்புகிறாயோ அப்படி செய். 



ஸர்வகுஹ்யதமம் பூய: ஷ்ருணு மே பரமம் வச:।
இஷ்டோ அஸி மே த்ருடமிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம்॥ 18.64 ॥

அனைத்திலும் ரகசியமான எனது மேலான அறிவுரையை மீண்டும் கேள். எனது உற்ற நண்பனாக இருக்கிறாய் அதனால் உனக்கு நல்லதை சொல்கிறேன். 

மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு।
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோ அஸி மே॥ 18.65 ॥

என்னிடம் மனத்தை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபாடு, என்னை வணங்கு, என்னையே அடைவாய். உனக்கு சத்தியம் செய்து இதனை உறுதி கூறுகிறேன். எனக்கு உகந்தவன் நீ. 

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ।
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷ்யயிஷ்யாமி மா ஷுச:॥ 18.66 ॥

எல்லா கர்மங்களையும் அறவே விட்டு என்னை மட்டுமே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே. 

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந।
ந சாஷுஷ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோ அப்யஸூயதி॥ 18.67 ॥

தவமில்லாதவன், பக்தி இல்லாதவன், சேவை செய்யாதவன், என்னை நிந்திப்பவன் – இவர்களுக்கு ஒரு போதும் நீ இந்த கீதா உபதேசத்தை சொல்ல கூடாது. 



ய இதம் பரமம் குஹ்யம் மத்பக்தேஷ்வபிதாஸ்யதி।
பக்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஷய:॥ 18.68 ॥

யார் இந்த மேலான ரகசியத்தை என் பக்தர்களுக்கு சொல்கிறானோ, என்னிடம் மேலான பக்தி கொள்கிறானோ அவன் சந்தேகமில்லாமல் என்னையே அடைகிறான். 

ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஷ்சிந்மே ப்ரியக்ருத்தம:।
பவிதா ந ச மே தஸ்மாதந்ய: ப்ரியதரோ புவி॥ 18.69 ॥

மனிதர்களுள் எனக்கு மிகவும் பிரியமானதை செய்பவனும் மிகவும் பிரியமானவனும் அவனை விட வேறு யாரும் இல்லை. இருக்கவும் மாட்டான். 

அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:।
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி:॥ 18.70 ॥

தர்மபரமான இந்த நமது உரையாடலை யார் படிக்கிறானோ அவன் என்னை அறிவு வேள்வியால் வழிப்பட்டவன் ஆவான். இது எனது கருத்து. 

ஷ்ரத்தாவாநநஸூயஷ்ச ஷ்ருணுயாதபி யோ நர:।
ஸோ அபி முக்த: ஷுபாம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம்॥ 18.71 ॥

இதனை அவமதிக்காமல், செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கையோடு ஒருவன் கேட்டால் அவனும் முக்தனாகி புண்ணியம் செய்தவர்கள் அடைகின்ற நல்லுலகங்களை அடைவான். 



கச்சிதேதச்ச்ருதம் பார்த த்வயைகாக்ரேண சேதஸா।
கச்சிதஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே தநம்ஜய॥ 18.72 ॥

அர்ஜுனா ! இதனை நீ ஒருமுகப்பட்ட மனத்துடன் கேட்டாயா ? தனஞ்சயா ! அறியாமையிலிருந்து தோன்றியதான உனது மனக்குழப்பம் தெளிந்ததா ? 

அர்ஜுன உவாச।
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்தா த்வத்ப்ரஸாதாந்மயா அச்யுத।
ஸ்திதோ அஸ்மி கதஸம்தேஹ: கரிஷ்யே வசநம் தவ॥ 18.73 ॥

அர்ஜுனன் கூறினான்: கிருஷ்ணா ! உனதருளால் என் மனமயக்கம் ஒழிந்தது. சுயநினைவு வந்தது. சந்தேகங்கள் விலகின . என் மனம் உறுதி பெற்று விட்டது. உனது சொற்படியே செய்கிறேன். 

இத்யஹம் வாஸுதேவஸ்ய பார்தஸ்ய ச மஹாத்மந:।
ஸம்வாதமிமமஷ்ரௌஷமத்புதம் ரோமஹர்ஷணம்॥ 18.74 ॥

சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு கிருஷ்ணருக்கும் சிறந்தவனாகிய அர்ஜுனனுக்கும் நடைபெற்றதும் மயிர்கூச்செரிவதும் அற்புதமானதுமான உரையாடலை நான் கேட்டேன். 

வ்யாஸப்ரஸாதாச்ச்ருதவாநேதத்குஹ்யமஹம் பரம்।
யோகம் யோகேஷ்வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கதயத: ஸ்வயம்॥ 18.75 ॥

இந்த மேலான சிறந்த யோகத்தை யோகேசுவரனாகிய கிருஷ்ணர் தாமே சொல்வதை வியாசரின் அருளால் நான் நேரடியாக கேட்டேன். 



ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாதமிமமத்புதம்।
கேஷவார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு:॥ 18.76 ॥

மன்னா ! கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த புண்ணியமான அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன். 

தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்புதம் ஹரே:।
விஸ்மயோ மே மஹாந்ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந:॥ 18.77 ॥

மன்னா ! ஹரியின் அந்த அற்புத வடிவத்தை எண்ணியெண்ணி எனக்கு பெரும் வியப்பு உண்டாகிறது. நான் மேலும் மேலும் களிப்படைகிறேன். 

யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தநுர்தர:।
தத்ர ஷ்ரீர்விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம॥ 18.78 ॥

யோகேசுவரனாகிய கிருஷ்ணரும் வில்லை தாங்கிய அர்ஜுனனும் எங்கே உள்ளார்களோ அங்கே செல்வமும் வெற்றியும் வளமும் நீதியும் நிலைத்திருக்கும். இது எனது கருத்து. 

ஓம் தத்ஸதிதி ஷ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஷ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
மோக்ஷஸம்ந்யாஸயோகோ நாம அஷ்டாதஷோ அத்யாய:॥ 18 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'மோட்ச சன்யாஸ யோகம்' எனப் பெயர் படைத்த பதினெட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது. 



ஓம்
ஷாம்தாகாரம் புஜகஷயநம் பத்மநாபம் ஸுரேஷம்।
விஷ்வாதாரம் ககநஸத்ருஷம் மேகவர்ணம் ஷுபாம்கம்।
லக்ஷ்மீகாம்தம் கமலநயநம் யோகீபிர்த்யாநகம்யம்।
வம்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைகநாதம்॥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக