சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற தினை இட்லி
தேவையான பொருள்கள்:
- தினை அரிசி நான்கு கப்
- உளுத்தம் பருப்பு இரண்டு கப்
- வெந்தயம் ஒன்றரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- இஞ்சி நெல்லிக்கனியை விட குறைவான அளவு
- கடுகு தேவையான அளவு
- கருவேப்பில்லை தேவையான அளவு
- துருவிய கேரட் தேவையான அளவு
- கொத்தமல்லி தேவையான அளவு
- கடலைப் பருப்பு தேவையான அளவு
செய்முறை:
- தினை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய இவை மூன்றையும் தனித்தனியாக ஊறவைத்து, தனித்தனியாகவே அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது அரைத்த தினை அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகிய இவை மூன்றையும் ஒன்றாகக் கரைத்து சுமார் பத்து மணி நேரம் ஊறவைக்கவும்.
- பின்னர் இஞ்சி, கடுகு, கடலைப் பருப்பு, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகிய இவை அனைத்தையும் தாளித்து நீங்கள் அரைத்து வைத்து இருக்கும் மாவில் கொட்டவும். கொட்டி பின் நன்றாகக் கலக்கவும்.
- இப்போது மேற்கண்ட மாவை இட்லி தட்டில் வைத்துக் குக்கரில் அவித்து எடுத்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
- இதோ இப்போது சுவையான தினை இட்லி தயார்.
தினை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதுபோன்ற பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக