Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 2 அக்டோபர், 2018

சென்னையில் வீடு வாடகை லீஸ்க்கு தேடுறிங்களா கொஞ்சம் உஷார்




முன்பெல்லாம் நமக்கு வீடு வாடகைக்கோ இல்லை லீஸ்க்கு வேண்டும் என்றால் தெரு தெருவாக அலைந்து திரிந்து வீட்டை கண்டு பிடித்து வீட்டு சொந்தகாரரிடம் பேசி அவர் சொல்லும் நிபந்தனைகள் எல்லாம் எற்றுக்கொண்டு அந்த வீட்டுக்கு பால் காய்ச்சி குடிபோவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்..

இன்று இருக்கும் இளைய தலைமுறையினரோ வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே முடிக்க வேண்டும் என்று எண்ணுவோறின் எண்ணிக்கை.மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதன் பலனாக பல மோசடி கும்பலும் வித விதமாக ஏமாற்ற தயாராகி வருகின்றன என்றால் அது மிகையாகாது அப்படி ஒரு மோசடி கும்பலை பற்றியதே இந்த தொகுப்பு...

இப்பொழுது எல்லாம் வீடு வாடைக்கு என்ற தகவல் பலகையை எந்த ஒரு வீட்டின் முன் உள்ள கதவில் அவ்வளவு எளிதாக காணமுடிவதில்லை காரணம் அதிக வாடகைக்கு ஆளை நாங்கள் அழைத்து வருகிறோம் என இடைதரகர்கள் வீட்டின் உரிமையாளரிடம் பேசி ஆசையை தூண்டிவிடுகின்றனர்.

அப்படி பட்ட ஒரு கும்பல் தான் இது சென்னையில் எங்கே வீடு வாடகைக்கு வேண்டும் என்றாலும் எங்களை அணுகவும் எங்கள் நிறுவனம் சென்னையில் பிரபலம் என பல பொய்யான விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது


















இந்த நிறுவனத்தில் வீடு வாடகைக்கு /லீஸ்க்கு வேண்டும் என தொடர்பு கொண்டால் போதும் நாம் கேட்ட இடத்தில் வீடு கிடைக்கும் ஆனால் நிபந்தனைகளோடு

நீங்கள் லீஸிற்கு வீடு எதிர்பார்கிறீர்கள் என்றால் லீஸ் ஒப்பந்தம் இந்த நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் பணம் இவர்களிடம் தான் கொடுக்க வேண்டும்


நீங்கள் வாடகைக்கு வீடு எதிர்பார்கிறீர்கள் என்றால் மாதம்தோறும் வாடகையை குடிநீர்,மின்சார கட்டணம் முதலியவையை  இந்த நிறுவனத்திடம் தான் நீங்கள் கொடுக்க வேண்டும் இவர்கள் தான் வீட்டின் உரிமையாளர்களிடம் தருவதாக கூறி விட்டு ஏமாற்றி விடுகின்றனர்

வீட்டின் உரிமையாளரோ வாடகை பணம் வராததால் குடியிருப்போரிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர் மின்சார இணைப்பை துண்டிப்பது குடிநீர் இணைப்பை துண்டிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுகின்றனர்

சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் நாங்கள் கொடுத்து விட்டோம் நாங்கள் பேசுகிறோம் என்று சொல்லி இணைப்பு துண்டிக்கப்படுகிறது ஆனால் இன்றளவும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது வீட்டில் தொடர்ந்து இருக்கவும் முடியாமல் வீட்டை காலி செய்ய முடியாமலும் இன்னும் பல குடும்பங்கள் அல்லல் பட்டு வருகிறது.

இது போன்ற பல போலி நிறுவனங்கள் இயங்கி வருகிறது இது போன்ற இடைதரகர்களை நம்பி நீங்களும் இருதலை கொள்ளி எறும்பாக மாறிவிடாதீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக