Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 31 ஜனவரி, 2019

கேழ்வரகு கூழ்

Fine millet colloid


தேவையான பொருட்கள் :
      கேழ்வரகு மாவு – அரைகிலோ
      நொய் (பச்சரிசி) – 200 கிராம்
      சின்ன வெங்காயம் – 3  
      தயிர் – இரண்டு கப்
      உப்பு – தேவையான அளவு

செய்முறை :
  • முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.                                                         
  • மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.

  • இதனை இரவில் செய்து வைக்கவும்.
  • காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.
  • இந்ந கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்


நன்மைகள் : இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக