Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 8 ஜனவரி, 2019

அசோகர் ஏன் மரம் நட்டார்!














அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!

ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.


நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.




என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!