Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 மே, 2019

ஜீவ சமாதி என்றால் என்ன?









ஜீவ சமாதி என்றால் என்ன? க்கான பட முடிவு



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ஜீவ சமாதி என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள்.

சில மகான்கள் தங்கள் உடல் கெடாதவாறு இந்திரியத்தை உடலிலேயே இருக்கும்படி செய்து, தன் அறிவை உணர்வுகளை பிரபஞ்சத்தோடு இணையும்படி செய்து, தங்கள் உடலைச் சுற்றி நல்ல ஒரு காந்த களத்தை உருவாக்கி விடுவார்கள்.

அந்த காந்த களத்தில் நாம் நுழையும் போது நம் ஜீவகாந்தம் அந்த மகானின் உயர்காந்த உணர்வுகளோடு கலக்கும் போது, நமது சிந்தனை தளம் உயர வாய்ப்புண்டு.
நமது வேண்டாத எண்ணங்கள் நீங்கி, நாம் வாழ்வில் உயர நாம் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு கிட்டும்.

சுருக்கமாக, சொல்வதென்றால் நமது குறைபாடுகளை நீக்கி நமக்கு வளமான வாழ்வை, நமதுவினை பதிவுகளுக்கேற்ப, சீரமைக்க உதவும். அவ்வளவுதான்.

அங்கே போய் தியானம் செய்து அந்த உணர்வோடு கலந்து தன்னை மறக்கவேண்டும், தளம் மாற வேண்டும் என்று ஏதேதோ புரியாத வகையில் சொல்கிறார்களே? என்று சிலர் கூறுவார்கள்.

தியானம் என்றால் என்னவோ ஏதோ என்று குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஒரு செயலை முழுமனதுடன், சிந்தனை சிதறாமல் நீங்கள்செய்தால் அதுவே தியானம்தான்.

One thing at one will என்று மகரிஷி கூறுவார்.

ஜீவசமாதியில், உங்கள் கவனம் முழுவதும், அந்த மகானின் உயர் சிந்தனைகளோடு உங்கள் உணர்வுகளும் கலக்க வேண்டும் என்று இருந்தால் போதும்.

பிரபஞ்ச பேராற்றலும் உங்களோடு இணைந்து உங்களுக்குள் என்ன மாற்றம் தேவையோ அது இயல்பாக நடந்து விடும்.அவ்வளவுதான்.போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

எந்த சிறப்பான கோயிலுக்கு போனாலும் சித்தர் பீடம் இருக்கும். விசாரித்து அங்கே போய், அமைதியாக இயல்பாக உங்கள் கவனத்தை அங்கேயே நிலை நிறுத்துங்கள்.மற்றவை தானாக நடக்கும்.

இன்னும் ஒரு சிறு விளக்கம்:

ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம்+ஆதி.
அதாவது ஆதியாகிய இறைவனிடம் இருந்த வந்த ஜீவனை சமன் செய்தல் என்று பொருள்.

ஞானிகள், யோகிகள், சித்தர்கள், சாதுக்கள் போன்றவர்கள் சித்தம் என்னும் அறிவைக் கொண்டு மனதை வெல்வதற்கு வாழ்வில் கடுமையான ஒழுக்கங்களையும், உயர்ந்த தவநெறிமுறைகளையும் தனது இரு கண் களினும் மேலாக பின்பற்றி வருகின்றனர்.

உடலையும் உள்ளத்தையும் மாசின்றி பேணி காக்கின்றனர். அலைமோதும் ஜீவனை ஒரு நிலைப்படுத்தி தன்னையே உயர்ந்தவனாக ஆக்குவதே சித்தர் கலை.

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை என்கிறார் திருமூலர்.

கடவுளை காண முயன்று கொண்டிருப்பவர்கள் பக்தர்கள்.ஆனால் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள்.

யோக் என்றால் சமஸ்கிருத்தில் வழி என்று பொருள். இறைவனைக் காணும் வழியைக் கண்டவனே யோகி.

இறைவனைப் பற்றிய சிந்தனையுடன் சின் அல்லது ஆதி போன்ற முத்திரையில் யோகி அமரும் ஆசிரமம்தான் "யோகாஸ்ரமம்" எனவும் கூறுகின்றனர்.

சமாதியடைவது என்பது முடிவு பெறும் ஒரு நிலையே அல்ல.

ஞானிகள் தங்களுடைய ஆற்றலும் அருளும் என்றுமே இந்த அண்டத்தில் நிலைத்திருக்கச் செய்து விட்டு இறைவனோடு இரண்டறக் கலக்கின்றனர்.

சமாதிநிலையில் இருப்பதும் யோகநெறி யின் உச்சநிலை என உரைக்கப்படுகிறது.

இவர்களின் உடல் மன இயக்கம் மட்டுமே நின்று போயிருக்குமே தவிர உயிர் உடலை விட்டு பிரிவதில்லை என்கிறார் திருமூலர்.

இதை பதிவாக எளிமையாக போடுவதற்கு காரணம் எந்த புகழ் பெற்ற கோவிலுக்கு சென்றாலும் அங்குள்ள ஜீவசமாதியை விசாரித்தறிந்து அங்கு சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து நமது எண்ணங்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இந்த எண்ண உயர்வுக்கு  நீங்கள் பெரிய தவ ஆற்றல் மிக்கவராகவோ, சித்தர்கள் போன்ற உணர்வுதளமோ தேவையில்லை.
சித்தர்கள் வழிபாடு வாழ்வில் சிறப்பைத் தரும்....
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக