Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஜூன், 2019

அதிக அளவில் உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்... மனித சமூகத்துக்கு அச்சுறுத்தலா?


 Image result for அதிக அளவில் உருகும் ஆர்டிக் பனிப்பாறைகள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com



ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகுவது, உலகிற்கு விடுக்கப்பட்ட அபாயம் என்பதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 
பருவநிலை மாறுபாடுகள் காரணமாக, ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவது உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டிக் பகுதியில் கடந்த 1990 ஆண்டுகளில் காணப்பட்ட பனிப்பாறைகள் வெப்பமாதல் காரணமாக தற்போது மூன்று மடங்கு அளவிற்கு உருகியுள்ளதாகவும், இதனால், கடல் மட்டம்  மிக வேகமாக உயர்ந்து வருவதையும் அறிவியல் வல்லுநர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். தற்போது ஆர்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப நிலை 3.5 டிகிரி செல்சியஸ் அளவிற்கு காணப்படுகிறது. 
இது குறித்து சுற்றுச்சூழல் அறிஞர்கள் மேற்கொண்ட சோதனையில், உலக வெப்பமாதல் காரணமாக காற்றுப்பரப்பு வெப்படைந்து பனிக்கட்டி உருகி  கார்பன்டை ஆக்சைடு,  ஆக்ஜினாகவும் வெளிப்படுவதும், நீரில் வளரும் சிறிய மீன் வகைகளை பெரிய வகை மீன்களும்,  போலார் கரடிகளும்  உணவாக உட்கொள்ளும் வாழ்க்கை சுழற்சி முறையிலும் பெரும் மாறுதல் நிகழ்ந்துள்ளதை கண்டறிந்துள்ளர்.  பருவ நிலை மாறுபாடுகளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகளை தடுத்திடும் நடவடிக்கைகளை, இனியும் காலம் தாழ்த்தாமல்  உலக நாடுகள் முன் எடுத்து செல்ல  வேண்டிய அவசியத்தை  இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் அறிவியல் விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 
சமீப காலமாக இப்பகுதியில் வசிக்கும் போலார் கரடிகளின், வாழ்வியல் நடவடிக்கைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.  உணவிற்காக இடம்பெயர்ந்திடும் அவலமும், அவற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தும் வருகிறது.  இப்பகுதி வாழ்வியல் விலங்குகளின்  உணவு சங்கிலி பாதிப்பு,  இனி வருங்காலங்களில் உலகில் உள்ள மற்ற உயிரினங்களிடமும் பிரதிபலிக்கும் என்ற அறிவியல் வல்லுஞர்களின் கூற்றையும் மறத்து ஒதுக்கி விட இயலாது. 
வெப்பநிலை உயர்வின் காரணமாக  ஆர்டிக் துருவப்பகுதியில் அதிகளவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுவதால், கடல் நீர்மட்டம் உயர்ந்து, ஆசியாவின் வங்க தேசத்தையும், அமெரிக்காவின்  ஃப்ளோரிடா உள்ளிட்ட நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கடுத்துவிடும் என்ற அபாயகரமான கணிப்புகளும் வெளியாகியுள்ளது. இது தொடர்ந்து இறுதியில், உலகம் முழுவதும் உள்ள 80 முதல்  90 சதவிகித மக்களும் பலியாவார்கள் என்பதும்,  ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கும்  என்ற அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது. உலகம் எதிர்கொள்ளும் இந்த அபாயத்தை, உலக மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். 
 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக