Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 10 ஜூன், 2019

விரைவில் தமிழகம் முழுவதும் BSNL 4G நெட்வொர்க்!




இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com


விரைவில் தமிழகம் முழுவதும் BSNL 4G நெட்வொர்க்!
தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று பொது மேலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர் ராஜூ திருச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்பட்டது. மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் 4ஜி சேவையை விட பி.எஸ்.என்.எல் அதிவேகமாக இருப்பதால், இதில் அதிகமான வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இதுவரையில் சேலம், கோவை மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் பிஎஸ்என்எல் 4ஜி இணைப்பைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இதன் அடுத்தக்கட்டமாக திருச்சி, மதுரை, நாகை ஆகிய மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குள்ளாக 4ஜி சேவை தொடங்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரிவாக்கம் செய்யப்படும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 5ஜி சேவைகள் தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகிறது’. இவ்வாறு தமிழ்நாடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் ராஜூ தெரிவித்துள்ளார்.

உலகில் 4ஜி நெட்வொர்க்கை தாண்டி 5ஜி வந்து விட்டது. அதற்கு ஏற்ப சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகம் ஆகிவிட்டது. மேலும், லெனவோ 5ஜி லேப்டாப்,ரெட்ம 5ஜி ஸ்மார்ட்போன் ஆகியவை விரைவில் அறிமுகமாக உள்ளது. இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரும் அடுத்தக்கட்ட முன்னேற்றத்தில் செல்லும் நிலையில், பிஎஸ்என்எல் இப்போது தான் 4ஜி சேவையை கொண்டு வருகிறது. அதுவும் முழுமை பெறவில்லை. 

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக