Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 25 ஜூலை, 2019

புகழ்பெற்ற தேவாலயம்... வேளாங்கண்ணி !!


Image result for புகழ்பெற்ற தேவாலயம்... வேளாங்கண்ணி !!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

வேளாங்கண்ணி நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடற்கரை இடமாகும். நாகப்பட்டினத்திலிருந்து ஏறத்தாழ 13கி.மீ தொலைவிலும், திருவாரூரிலிருந்து 33கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

வேளாங்கண்ணி இந்திய மக்கள் விஜயம் செய்யும் யாத்ரீக மையங்களில் ஒன்றாகும். வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு நகரம் இது.

கடற்கரையின் அழகும், ஓயாத அலைகளின் சத்தமும் சுற்றுலா வருபவர்களை இன்னும் ஈர்க்கிறது. இந்த புகழ்பெற்ற தேவாலயம் உலகம் முழுவதும் இருந்து யாத்ரீகர்களை ஈர்க்கிறது. கிறிஸ்துவர்கள் மட்டுமல்ல, மற்ற மதத்தினரும் இந்த தேவாலயத்திற்கு வருகிறார்கள்.

இங்கு அமைந்துள்ள புனித பெசிலிக்கா எங்கள் லேடி ஆப் ஹெல்த், இந்தியாவிலுள்ள முக்கியமான கிருத்துவ யாத்திரை தலங்களில் ஒன்றாகும்.

இங்கு உலகம் எங்கும் இருக்கக்கூடிய இந்துக்களும், கிறிஸ்துவர்களும் சாதி சமய வேறுபாடின்றி வருகை புரிகின்றனர். மத நல்லிணக்கத்தைப் போற்றும் திருத்தலமாக வேளாங்கண்ணி விளங்குகிறது. இங்கு குழந்தை வடிவத்தில் மேரி மாதாவுடன் இயேசு காட்சித் தருகிறார்.

மேலும், கடற்கரையின் ஓரத்தில் சுற்றுலா வருபவர்களுக்கு சாப்பிடுவதற்கு சுவையாக மீன்கள் பொரித்துத் தரப்படும். இங்கு குடும்பத்துடன் சென்றால் கடற்கரையில் ஆனந்தமாக விளையாடி மகிழலாம்.

இது ஜாதி மற்றும் சமயமில்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் யாத்ரீகர்களை இழுக்கிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் இங்குள்ள கடற்கரையும், அருங்காட்சியகமும் நமது நேரத்தினை பயனுள்ள வகையில் செலவழிக்க ஏற்ற இடங்களாகும்.

எப்படி செல்வது?

வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

விமானம் வழியாக :

திருச்சிராப்பள்ளி விமான நிலையம்.

ரயில் வழியாக :

வேளாங்கண்ணி ரயில் நிலையம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கட்டணங்களுடன் தங்குவதற்கு விடுதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

நாகூர்தர்கா.
எட்டுக்குடி.
சிக்கல் முருகன் கோவில்கள்.
அருங்காட்சியகம்.

இதர சுற்றுலாத்தலங்கள் :

பூம்புகார்.
தரங்கம்பாடி.
கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக