Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 24 ஜூலை, 2019

மக்கும் குப்பைகளை பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி..?



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மக்கும் குப்பைகளை தெருவுக்கு தாரைவார்க்காமல் பயனுள்ள உரமாக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரித்து குப்பைத் தொட்டியில போடுமாறு, மாநகராட்சி நிர்வாகம் எத்தனை முறை சொன்னாலும், பொதுமக்கள் அவற்றை காதில் போட்டுக்கொள்வதில்லை… காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில் வீசுவது வாடிக்கையாகயான ஒன்று... அதிலும் வார இறுதியில் வீசப்படுற மீன் போன்ற இறைச்சிக் கழிவுகள் குறித்து சொல்லவேண்டியதில்லை... 

தொடர்ந்து அனைவரும் குப்பையை வெளியே வீசிவந்தால், எதிர்கால தலைமுறையினர் குப்பைமேட்டுல்தான் வாழவேண்டிய நிலை ஏற்படும்... தினமும் குப்பைகளை தெருவில் கொட்டிக்கொண்டிருந்தால், எதிர்கால பூமி எப்படியிருக்கும். அனை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை, இதற்கு தீர்வாக, கழிவுகளை பயனுள்ள உரமாக மாற்றி வருகின்றனர் சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அதிகாரிகள். சென்னை எழும்பூரில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கிடங்கு அமைக்கப்பட்டு, சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் சேரும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

முதலில், தரம் பிரித்தெடுக்கப்படும் குப்பைகள் பேட்டரி கார்கள் மூலம் கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது... பின்னர் இயந்திரம் மூலம் அவை தூளாக்கப்பட்டுகிறது. இதற்காகவே, மும்பையில் இருந்து 12 லட்சம் மதிப்பில் பிரத்யேக இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. காய்கறி கழிவுகள், தென்னை ஓலைகள், இளநீர் கூடு என அனைத்தையும் தவிடுபிடியாக்குகிறது இந்த இயந்திரம். அவை, 12 அடி நீளமும், 4 அடி அகலமும் உடைய கண்டெய்னரில் சேமிக்கப்பட்டு, சிதைக்கப்படுவதாக கிடங்கு மேற்பார்வையாளர் சத்யா தெரிவித்துள்ளார். 

20 நாட்களுக்கு பிறகு சிதைவடைந்த குப்பைகளை காயவைத்து, நன்றாக உலர்ந்த பின்பு சலித்த, எடுத்து இயற்கை உரமாக்கப்படுகிறது. இந்த உரத்தை வீட்டுக்கும் பயன்படுத்தலாம், விற்பனையும் செய்யலாம். குப்பைகளை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வேளையில், தூய்மை என்ற ஒன்றை நாம் அனைவரும் கடைபிடித்தால், சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுவதுடன், சுகாதாரமான வாழ்வுக்கும் வழிவகுக்கும்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!