>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 8 ஆகஸ்ட், 2019

    கோவை ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

    கோவை ரயில் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     

    இந்த விபத்தில் ஒருவர் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

     கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இருசக்கர வாகன பார்சல் அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

    கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

    ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடம் இன்று காலை 3.30 மணி அளவில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.


    உயிரிழந்த பவிழம் மணி


    இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள் பவிழமணி, இப்ராகிம் மற்றும் வடமாநில தொழிலாளி ஆகிய 3  பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் வடமாநில தொழிலாளி ராஜூ

    இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட இப்ராஹிம் மற்றும் பவிழமணி ஆகிய 2 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த வடமாநிலத் தொழிலாளி ராஜூ என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்பு துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக