Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 
நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து, இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

மியான்மரின் தென்கிழக்கு மாகாணங்களில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து அங்கு வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வர தலீபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இனி ஆப்கானிஸ்தானின் விதி, அதன் மண்ணிலேயே தீர்மானிக்கப்படும் என்றும் வெளிநாட்டின் தலையீடு இருக்காது என்றும் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான கவுகாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் சிறுவன் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!