Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அமெரிக்க கடற்கரையில் பாறை உருண்டு விழுந்து 3 பெண்கள் பலி

 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் அன்னே கிளாவ் (வயது 35). இவர் மார்பக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் அந்த நோயில் இருந்து அவர் விடுபட்டார்.

இதனை கொண்டாடும் விதமாக அவர் தனது குடும்பத்தினருடன் சான்டியாகோ நகரில் உள்ள கிராண்ட் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர்கள் கரையோரத்தில் பாறைக்கு கீழ் குடைகளுடன் அமைக்கப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து, கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போதும் யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்த பாறை திடீரென உருண்டு விழுந்தது. இதில் அன்னே கிளாவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பாறைக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த கோர விபத்தில் அன்னே கிளாவ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். மேலும் அவரது தாய் மற்றும் உறவுக்கார பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக