>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 29 ஆகஸ்ட், 2019

    இனி அமேசான், பிளிப்கார்ட்டில் ஐபோன் கிடைக்காது! புதிய வழி அறிமுகம்

     

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விற்பனையை நேரடியாகவே இந்தியாவில் தொடங்கிவிடும். இந்த விற்பனை இன்னும் 3 - 5 மாதங்களில் ஆரம்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது.



    இனி அமேசான், பிளிப்கார்ட்டில் ஐபோன் கிடைக்காது! புதிய வழி அறிமுகம்
    ஹைலைட்ஸ்
    • சொந்த இணையதளம் வழியாக ஆப்பிள் தனது விற்பனையை ஆரம்பிக்க உள்ளது.
    • மும்பையில் ஆப்பிள் கடையும் இன்னும் 12 முதல் 18 மாதங்களில் தொடங்க உள்ளது.
    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விற்பனையை இந்தியாவில் தானே நேரடியாக மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்துவருகிறது.

    இந்தியாவில் அயல்நாட்டு நிறுவனங்களின் விற்பனையை அனுமதிக்கும் வகையில் வெளிநாட்டு ஒற்றை பிராண்ட் நிறுவனங்கள் தங்கள் சொந்த ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துகொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதனால், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் விற்பனையை நேரடியாகவே இந்தியாவில் தொடங்கிவிடும். இன்னும் 3 - 5 மாதங்களில் இந்த விற்பனை ஆரம்பிக்கலாம் என அந்நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர்.



    இந்திய மொபைல் சந்தையில் போலி ஐபோன்கள் விற்பனையையும் இதன் மூலம் ஒழிக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இத்துடன் மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் கடையும் இன்னும் 12 முதல் 18 மாதங்களில் தொடங்க உள்ளது

    இந்தியாவில் தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்யவும், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தியை மேற்கொள்ளவும் அனுமதி தரப்படுகிறது ஐந்து ஆண்டுகளுக்கு உள்நாட்டு மூலப் பொருட்களை 30 சதவீதம் வரை பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.  



    தற்போது ஆப்பிள் நிறுவனம் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), பேடிஎம் மால் (Paytm Mall) போன்ற பிற நிறுவனங்களுடன் ஆன்லைன் விற்பனைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையாகும் ஐபோன்களின் எண்ணிக்கையில் 35 முதல் 40 சதவீதம் ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. 25 சதவீதத்துக்கு அதிகமான ஐபாட், மேக்புக் லேப்டாப், போன்ற பிற ஆப்பிள தயாரிப்புகளின் விற்பனையும் ஆன்லைன் மூலம்தான் நடக்கின்றன.

    தற்போது ஆப்பிள் நிறுவனத்துக்கு 25 நாடுகளில் கடைகள் (Apple Store) உள்ளன. அங்கேயே அந்நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனையும் இயங்குகிறது
    .
     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக