Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

தோளைப் பிடி, காலைப் பிடி...!

Image result for தோளைப் பிடி, காலைப் பிடி...!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

பொதுவாக ஒரு விளையாட்டை விளையாடும்போது வெற்றி தோல்வி என்பது பெரிதான விஷயம் இல்லை. அவர்களுக்கு கிடைத்த உற்சாகமும், சந்தோஷம் தான் பெரிதான விஷயம் ஆகும்.

குழந்தைகளுக்கு சோர்வே இல்லாமல் உற்சாகத்தை தரும் விளையாட்டுகளில் ஒன்றான தோளைப் பிடி, காலைப் பிடி விளையாட்டை பற்றி இன்று பார்க்கலாம்.

எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை பல பேர் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

முதலில் இந்த விளையாட்டை விளையாடும் நபர்கள் அனைவரும் நான்கு பேர் கொண்ட சிறு குழுக்களாக பிரிந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குழுக்கள் தயரான பிறகு விளையாட்டை தொடங்கலாம். பிறகு விளையாட்டை தொடங்கும் இடத்திலிருந்து 30 அல்லது 40 அடி தொலைவில் ஒரு இடத்தை இலக்காக குறித்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் நான்கு நபர்கள் இருப்பார்கள். அவர்களில் இருவர் பக்கத்தில் நின்றவாறு, அவர்களுடைய கைகளை பின்னிக் கொள்ள வேண்டும். மூன்றாவது நபர் அவரது இடது காலை மடக்கி இருவரும் பின்னியிருக்கும் கைகளால் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது காலை பின்னாடி நிற்கும் நான்காவது நபர் பிடித்துக் கொள்வார்.

விளையாட்டில் உள்ள நான்கு குழுக்களும் இவ்வாறு நின்றுக்கொண்ட பிறகு, வெளியில் இருக்கும் ஒரு நபர் ரெடி என்றுச் சொன்னவுடன், 'வயதான தாத்தா வண்டியிலே வர்றாரு.. வழிவிடு.. வழிவிடு.." என்று குழுவில் உள்ள நபர்கள் அனைவரும் பாடிக்கொண்டே எதிரில் இருக்கும் இலக்கை தொட்டுவிட்டு மீண்டும் திரும்பி வர வேண்டும். இவ்வாறு எந்த குழு முதலில் வருகிறதோ அந்த குழு வெற்றி பெற்றுவிடும்.

இவ்வாறு செல்லும்போது, தோள்பட்டையை பிடித்திருப்பவர் கைகளை எடுத்துவிடக்கூடாது. அதே மாதிரி கைகளின் மேலியிலிருக்கும் காலையும் விட்டுவிடக்கூடாது. பின்னால் இருப்பவர் பிடித்திருக்கும் காலை விட்டுவிடாமல் கைகளால் பிடித்தப்படியே ஓடி வர வேண்டும்.

இதில் குழுவில் உள்ள ஒருவர் அவர்கள் பிடித்து இருக்கும் பிடியை விட்டுவிட்டால் அந்தக் குழு அவுட் ஆகிவிடுவார்கள். இதேபோல் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக