Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 31 ஆகஸ்ட், 2019

மாணவ, மாணவியர் பேராசிரியர் வீடுகளுக்கு செல்ல தடை..- சென்னை பல்கலை அதிரடி.!


 

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 

 

பேராசிரியர்கள் மாணவியரை தங்களது வீடுகளுக்கு அழைக்க கூடாதென சுற்றறிக்கை மூலமாக சென்னை பல்கலை கழகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அவர்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாதென சென்னை பல்கலை கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கல்வி வளாகங்களில் மாணவியர் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக கூடாது என்பதற்காக பல்கலை துணை வேந்தர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், மாணவியர் படிப்பு சம்மந்தமான தேவைக்காக கூட பேராசியர் வீடுகளுக்கு செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி வளாகத்தில் பெண் ஆசிரியருக்கும், மாணவியருக்கும் பிரச்னை ஏற்பட்டால் நேரடியாக என்னிடம் தெரியப்படுத்தலாம் என துணை வேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கல்வி சுற்றுலா போன்ற நிகழ்வுகளுக்கு மாணவர்களை வற்புறுத்த கூடாது. சிறப்பு அனுமதி பெரும் வரையில் அனுமதியின்றி மாணவர்களை அழைத்து செல்ல கூடாது என்று சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாணவியருக்கு ஏற்படும் இன்னல்களை தடுக்க பல்கலை கழகத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசியர் ரீட்டா ஜான் தலைமையில் அமைந்துள்ள இக்குழுவின் மூலம் மாணவியர் எழுத்து பூர்வமாக தங்களது புகாரை தெரியப்படுத்தலாம்.

இதன் நோக்கம் பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக சென்னை பல்கலை கழக வளாகத்தை மாற்றுவதற்கான முயற்சியே என பல்கலை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மாதா, பிதா என்ற வரிசையில் தெய்வத்திற்கு முன்னாள் குரு என்று ஆசிரியர் பெருமக்களையே கூறுகிறது தமிழ் மரபு. இந்நிலையில் இது போன்ற சுற்றறிக்கை பாதிக்கப்பட்ட மாணவியருக்கு நிம்மதியை கொடுத்தாலும் பிறருக்கு ஏன், எதற்கு என்ற கேள்வியை தூண்டும்.

கல்வி வளாகங்களில் ஆசிரியர்களால் மாணவியருக்கு இப்படியும் இன்னல்கள் ஏற்படுமா என்றால் அதற்கு நிர்மலா தேவியின் கதையே ஒரு உதாரணம். இன்னும் வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் எத்தனையோ..



 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!