>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

    குட்டித் தீவு... கடலில் ஒரு பூங்கா..!!

    Image result for தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    உயிரினப் பூங்கா என்றாலே நமக்கு நினைவில் வருவது விலங்குகளும், பறவைகளும் தான். ஆனால், கடல்வாழ் உயிரினங்களுக்கு என்று ஒரு உயிரினப் பூங்கா உள்ளது.

     தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடாவில் தமிழக சுற்றுலாத் துறையும், வனத்துறையும் இணைந்து உருவாக்கியுள்ள தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா ஆகும்.

    சிறப்புகள் :

     தேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா, இந்தியாவின் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

     இது 21 சிறிய தீவுகளையும், மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய பகுதியாகும்.

     தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 10கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா, தூத்துக்குடியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான கடற்பகுதியில் 160கி.மீ. நீளத்திற்குப் பரந்துள்ளது.

     தமிழகத்தின் தாமிரபரணி ஆறும், இலங்கையின் மல்வத்து ஆறும் இந்த வளைகுடாவில் வந்து சேர்கிறது.

    இங்கிருக்கும் மாங்குரோவ் காடுகளாலும், தாவரங்களாலும் இத்தீவுகள் தனிச் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

     இந்தியாவின் மிகப்பெரிய கடல்வாழ் உயிரினப் பூங்கா இதுதான். இந்த பூங்காவில் 3600க்கும் மேற்பட்ட கடல் தாவரங்களும், உயிரினங்களும், 117 வகையான பவளப் பாறைகளும் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

     இந்த பூங்கா பலருக்கும் ஆராய்ச்சிக் கூடமாக திகழ்கிறது. இதுவரை நேரில் கண்டிராத பல வகையான உயிரினங்களை இங்கு கண்டு ரசிக்க முடியும். இந்தியாவில் இருக்கும் 11 வகையான கடல் பாசிகளையும் ஒரே இடத்தில் இந்த பூங்காவில் காணமுடியும்.

     அரிய வகையான கடல் பசுக்கள், டால்பின்கள், கடற்குதிரைகள், பச்சைநிற கடல் ஆமைகள், பவள மீன்கள், சிங்க மீன்கள், ஆலிவ் ரிட்லி போன்ற பல உயிரினங்கள் இங்கு உள்ளன. இங்கிருக்கும் கடல் பாசிகளும், தேவையில்லா செடிகளும் கடல் பசு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கிறது.

    எப்படி செல்வது?

     மன்னார் வளைகுடா, இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் என்னும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. அங்கு சென்று படகுகளின் மூலம் மன்னார் வளைகுடாவை அடையலாம்.

    மண்டபத்திற்கு இராமநாதபுரம், இராமேஸ்வரம், மதுரை, தூத்துக்குடி போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    எப்போது செல்வது?

    அக்டோபர் முதல் ஜனவரி வரை செல்லலாம்.

    ரயில் வண்டி வழியாக :

    தூத்துக்குடி ரயில் நிலையம்.

    விமானம் வழியாக :

    மதுரை விமான நிலையம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக