Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 30 செப்டம்பர், 2019

ரிசர்வ் வங்கியிடம் கையேந்தும் மத்திய அரசு: ரூ.30 லட்சம் கோடி டிவிடெண்ட்?

 



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஏற்கெனவே, மேலும் 28,000 கோடி ரூபாயை இடைக்கால நிதி (Interim Dividends) என்ற பெயரில் ஆர்பிஐ கொடுத்துவிட்டது.


ஹைலைட்ஸ்
  • கார்ப்பரேட் வரி குறைப்பு அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயைக் குறைக்கிறது.
  • இதனால் 30 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் பெற அரசு திட்டமிட்டுள்ளது.
கார்ப்பரேட் வரி குறைப்பு மூலம் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையை வழங்கிய மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால டிவிடெண்ட் கேட்க உள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி கூடிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மத்திய அரசுக்கு 1,76,051 கோடி ரூபாய் நிதியை வழங்க முடிவு செய்தது. 1,23,414 கோடி ரூபாய் உபரி நிதியாகவும் கூடுதலாக 52,637 கோடி ரூபாய் ஒருமுறை தொகையும் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கெனவே, மேலும் 28,000 கோடி ரூபாயை இடைக்கால நிதி (Interim Dividends) என்ற பெயரில் ஆர்பிஐ கொடுத்துவிட்டது. நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டுக்காக 90,000 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் பெறுவதாக மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டது. இதனால் மீதி ஆர்பிஐ கொடுக்க இருப்பது 58,000 கோடி ரூபாய்.

2019-20 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு ஜிடிபியில் 3.3 சத வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்மையில் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு அரசின் வரி வருவாயைப் பாதிக்கும் என்பதால், அதனால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியிடம் இடைக்கால டவிடெண்ட் கேட்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

கார்ப்பரேட் வரி குறைப்பு அரசுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயைக் குறைக்கிறது. பின், 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஹோட்டல் அறை வாடகைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வரி வருவாய் 1,500 கோடி ரூபாய் வரை குறைகிறது.

இச்சூழலில் இந்த வருவாய் இழப்புகளைக் கருத்தில் கொண்டு, நிதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இடைக்கால டிவிடெண்ட் கொடுக்குமாறு கேட்க உள்ளது எனக் தகவல் கிடைத்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட்டுக்கான நிதியாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட 90 ஆயிரம் கோடியை விட 5,414 கோடி ரூபாய் அதிகமாகவே மத்திய அரசு வாங்கிவிட்டது. ரூ.95,414 கோடியை பட்ஜெட்டுக்கான டிவிடெண்டாக வாங்கியிருக்கிறது.

முந்தைய நிதி ஆண்டில் ரூ.5.35 லட்சம் கோடியாக இருந்த அரசின் கடன், நடப்பு நிதி ஆண்டில் ரூ.7.10 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கூறப்பட்டது. செப்டம்பருடன் இந்த நிதி ஆண்டின் 6 மாதங்கள் முடியும் நிலையில், இப்போதே கடன் ரூ.4.42 லட்சம் கோடியை மிஞ்சிவிட்டது. அதாவது கணிப்பில் 63 சதவீதம் எட்டப்பட்டுவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக