Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

3 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் போராட்டம்... சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா வாபஸ்...

.Image result for சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா வாபஸ்...

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஹாங்காங்கில் மூன்று மாதங்களாக நீடிக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, சர்ச்சைக்குரிய சட்டத்திருத்த மசோதா ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிரிமினல் வழக்குகளில் சிக்கும் நபர்களை சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் அரசு முடிவு செய்தது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் பல மாதங்களுக்கும் மேலாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

 போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலாலும், வன்முறையாலும் பலரும் பாதிக்கப்பட்டனர்.

சீன ராணுவத்தின்  எச்சரிக்கையையும் மீறி நடந்த போராட்டங்கள் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றன. சீன ராணுவத்தின் படைப்பிரிவுகள் ஹாங்காங் நகருக்கு அணி வகுத்தபோதும், போராட்டக்காரர்களை தடுக்க முடியவில்லை. மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், அமைதியை நிலைநாட்டவும், கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத்திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாக்கெடுப்போ, விவாதமோ இன்றி சட்டத்திருத்த மசோதா வாபஸ் பெறப்படுவதாக அவர் கூறியுள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக