>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 28 செப்டம்பர், 2019

    அழகுக்கு அழகு சேர்க்கும் இடம்... திருமூர்த்தி அருவி...!!

    Image result for அழகுக்கு அழகு சேர்க்கும் இடம்... திருமூர்த்தி அருவி...!!



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அருவியின் பெயர்தான் திருமூர்த்தி அருவி. இது திருப்பூரிலிருந்து ஏறத்தாழ 85கி.மீ தொலைவிலும், உடுமலைப்பேட்டையிலிருந்து ஏறத்தாழ 22கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இயற்கை சார்ந்த எழில்மிகு இடமாகும்.

    சிறப்புகள் :

     எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் அமைந்திருக்கிறது திருமூர்த்திமலை.

     திருமூர்த்தி அணையும், அதன் நீர்வீழ்ச்சியும் சுற்றுலாத்தலமாக உள்ளது. அதன் அருகே முதலை வளர்ப்பு பண்ணையும் உள்ளது.

     மேலும், வருடம் முழுவதும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் சிறு ஓடையும் உள்ளது.

     இந்த அருவிக்கு அருகில் தெய்வீகத்தன்மை கொண்ட அமலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    அருவிக்கு வரும் வழியில் குரங்குகளின் சேட்டைகளையும், இயற்கையின் அழகையும் ரசித்துக்கொண்டே வரமுடியும்.

     நீர்வீழ்ச்சி வந்து ஊற்றுவதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகவும், அழகுக்கு அழகு சேர்த்தது போலவும் இருக்கும்.

     மலைகளின் நடுவே மூலிகைச் செடிகள் அடர்ந்த பகுதியில் இருந்து திருமூர்த்தி அருவிக்கு தண்ணீர் வருகிறது.

    மேலும், அதில் மருத்துவ குணம் நிறைந்துள்ளதாக நம்பப்படுகிறது. அருவிக்கு மேலே பாறை முகடுகளுக்குள் பஞ்சலிங்க கோயில் ஒன்று இருக்கிறது.

    எப்படி செல்வது?

    திருப்பூர் நகரத்திற்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது. பேருந்து அல்லது ரயில் மூலமாக திருப்பூரை அடையலாம்.

    திருப்பூரிலிருந்து பேருந்து மூலமாகவோ, வாடகை வாகனங்கள் மூலமாகவோ திருமூர்த்திமலையை அடையலாம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    அமராவதி அணை.
    முதலைப்பண்ணை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக